முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 410

 சகோதரனை காப்பாற்ற சென்ற இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கும்பல்: நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!




சகோதரனிடம் தகராறில் ஈடுபட்டவர்களை தட்டிக் கேட்க சென்ற போது 25 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மூன்று வாலிபர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

 

டெல்லியில் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு மூன்று முதல் 4 பேர் கொண்ட கும்பல், பெண் ஒருவரை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும், அவருடைய ஆடைகளை கிழித்துவிட்டதாகவும் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்தனர்.


அப்போது, தன்னுடைய சகோதரனிடம் காரில் வந்த 3 பேர் பிரச்னையில் ஈடுபட்டதால் அங்கு வந்த போது அந்த 3 பேரும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக அந்த பெண் காவலர்களிடம் தெரிவித்தார். இது தொடர்பாக ஃபாதேபுர் பேரி காவல்நிலையத்தில் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


இதனையடுத்து காவல்துறைக்கு வந்த மற்றொரு தொலைபேசி அழைப்பில் அய நகர் பகுதியில் 3 பேர் தன்னை தாக்கி, தன்னிடம் இருந்து 30,000 ரூபாய் பறித்துச் சென்றதாக ஒருவர் கூறினார்.


சம்பவ இடத்துக்கு காவலர்கள் சென்ற போது ஷாஜத் (வயது 30) என்ற ட்ரக் ஓட்டுநர் போலீசாரிடம், நானும், சக தொழிலாளிகளிடம் லாரியில் இருந்து செங்கற்களை இறக்கிக் கொண்டிருந்தோம், அப்போது அங்கு வந்த 3 பேர் எங்களிடம் தகராறு செய்ததுடன் எங்களை தாக்கினர். பின்னர் என்னிடம் இருந்த பணப்பையை பறித்துச் சென்றனர். அதில் 30,000 ரூபாய் பணமும், சில ஆவணங்களும் இருந்ததாக அவர் கூறினார். இந்த சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.


காவல்துறை ஆணையர் அதுல் குமார் கூறுகையில் இரண்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் ஒரே கும்பல் தான் என தெரியவந்தது. வெள்ளிக்கிழமை மாலை காட்டுப்பகுதியில் பதுக்கியிருந்த அய நகர் பகுதியைச் சேர்ந்த யோகேஷ் (வயது 26), நவீன் லஹ்மோத் (வயது 25) மற்றும் பல்ஜீத் (வயது 30) ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5200 ரூபாய் பணமும், கார் ஒன்றும், சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?