முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 482

 ஒரு போராளியின் குருதிச்சுவடுகள்…

25ம் ஆண்டு வீரவணக்கநாள்- 30.03.2021

கடற்கரும்புலி 

கப்டன் இளையவள்

(இராசலிங்கம்.இராஜமலர்)

உவர்மலை.திருகோணமலை

வீரச்சாவு ::30.03.1996


கப்டன் செவ்வானமும் அவளும் தோழிகள். தான் கரும்புலியாகப் போனபோது தனது குப்பியை இவளிடம்தான் செவ்வானம் கொடுத்துச் சென்றிருந்தாள். இறுதிவரை அந்தக் குப்பியை இளையவள் வைத்திருந்தாள். அவளுக்குக் குப்பி தேவையில்லைத்தான், ஆனாலும் செவ்வானத்தினுடையது என்று வைத்திருப்பதில் தோழமை………………. நட்பு……………… அந்தக் கடல்மடியில் விட்டுச்சென்ற நீங்காத நினைவுகள்…………. அவை ஓயப்போவதில்லை, ஆர்ப்பரித்துச் செல்லும் கடலைகளைப்போல.


அப்போது அவள் ஓரளவுதான் நீந்துவாள். ஆழமான கடற்சுழிகள், கொந்தளிப்பு எதற்கும் எதிர்நீச்சல்போடும் திறணற்ற கற்றுக்குட்டி. நீச்சல்காரி, அன்றைய கடற்பயணம் கலகலப்பானதாக இருந்தது. ஆனாலும் கடல்நிலமை அவ்வளவு சரியில்லை. அமைதியாக இருக்கின்ற கடலில் திடீரென அலைகள் உயரக்கிளம்பலாம், காற்றுத் திசைமாறலாம்.


ஒரு பெரிய அலைவந்து படகு தடுமாறி அவள் விழுந்தேவிட்டாள். அவளோடு இன்னும் இருவர். அவள் ஒருமாதிரி தட்டுத் தடுமாறி மூச்சுத் திணற, மற்றவரின் கழுத்தைப்பிடித்து ஆதரவு தேட, இருவரையும் தூக்கிப் பயணம் முடிந்து திருமபினர்.


லெப்.கேணல் மாதவியக்காவிற்கு இந்தக் கதைபோய்விட்டது.


“இளையவள் நீந்தத் தெரியாமல்தானே அப்படிச் செய்தனை?” என்று கேட்க,

“இல்லையக்கா. நான் அவையளுக்கு நீந்தத் தெரியுமோ எண்டு பாக்கிறத்துக்குத்தான் அப்படிச் செய்தனான்”.


என்று சிரிக்காமல் கூறி, நடந்ததை அப்படியே தடம்புரட்டிவிட எல்லோருக்கும் ஒரே சிரிப்பு.


கடைசிக் காலங்கள் எல்லோரையும் குடல் அதிரச் சிரிக்கவைத்த கணப்பொழுதுகள்,,,,,,,,,,,,,, அவளுக்கு முதற் சண்டையும், கடைசிச் சண்டையும் அதுதான். அவளது சாவுக்கான நாள் குறித்தாயிற்று. அந்த நாளில்தான் அவளது பாசமான அண்ணனுக்குத் திருமணவீடு. இவளது வீட்டுக்காரர் இவளை விடுமுறையில் விடுமாறு கேட்க, முதலில் மறுத்துவிட்டாள். ‘நாள்’ தாண்டிப்போனால் தன் வாய்ப்பு போய்விடுமே என்ற ஏக்கம் அவளுக்கு.


“இளையவள் நீங்கள் வீட்டை போங்கோ, இன்னொருதரம் போக வாய்ப்பு உங்களுக்கு வரும்தானே!”


என்றபோதும் ஒரேயடியாய் மறுத்து, பின் தன் தமையனுடன் பொய் ஒரு நாள் நின்றுவிட்டு, கல்யாணத்திற்கு இல்லாமல் வந்துவிட்டாள்.


1996.03.30 அன்று இரவு கடலலைகள் அதிர்ந்து குலைய, எங்கள் இளையவள் கரைந்து போனாள். சுண்டிக்குளம் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமான அதிவேகப் பீரங்கிப் படகுகள் மூழ்கடிக்கப்பட்டன.


அண்ணனின் திருமணத்திற்கென திருகோணமலையிலிருந்து வந்த அம்மா திரும்பிப்போக முன்னர், தான் போய்விட வேண்டும், இல்லாவிட்டால் அம்மா அலைக்கழிவாரென்ர அவளின் விருப்பப்படியே அவள் போனாள்.


இளையவள் தன் அண்ணனின் மகளைப் பார்த்து வரைந்த ஓவியம்.


களத்தில் (26.06.1996) இதழிலிருந்து


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news b890

போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் ​சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.

e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?

  துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு,  By Gokulan  2 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந

d 265 சொந்த மகளை வண்புணர்வு புரிந்த தந்தைக்கு கடூழிய தீர்ப்பு

சொந்த மகளை வண்புணர்வு புரிந்த தந்தைக்கு கடூழிய தீர்ப்பு சொந்த மகளை மதுபோதையில் பாலியல் வண்புணர்வு புரிந்த தந்தை ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று 15 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளார். மகளையே பாலியல் வண்புணர்வு புரிவது உலக நீதி, இயற்கை நீதி, சமூக நீதி என்ற அனைத்துக்கும் முரணான ஒரு குற்றச் செயலாகும். அத்தகைய குற்றத்தைப் புரிந்த குற்றவாளிக்குக் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என தனது தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்ச ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். சிறுமி சாட்சியம் சொந்த மகளை வண்புணர்வு புரிந்த தந்தைக்கு கடூழிய தீர்ப்பு | Cruel Prison For Father Abused His Own Daughter இந்தச் சம்பவம் 2015 ஆம் ஆண்டு தை மாதமளவில் மாங்குளம் பகுதியில் இடம்பெற்றதாக சட்டமா அதிபரினால் குற்றம் சாட்டப்பட்டு, தந்தையாகிய எதிரி கைது செய்யப்பட்டு, வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமி 11 வயதுடைய பாடசாலை மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கு விசாரணையின