ஐக்கி நாடுகள் சவையினால் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக 22 நாடுகளால் கொண்டுவரப்பட்ட தீர்மானதிற்குப்பின்னர், சிறிலங்கா புலநாய்களால் தாயககத்தில் பிரசித்திபெற்ற கிட்டு பூங்கா தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது
நல்லூர் கிட்டுப் பூங்காவின் முகப்பின் அடையாளமாகக் காணப்பட்ட கொட்டகைக்கு புலநாய்களால் எமது உறவுகளிற்கு தெரியாதவாறு திட்டமிட்டு தீவைத்து நாசமாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இன்றிரவு 10 மணியளவில் மக்கள் வீடுகளில் உறங்கிக்கொண்டு யிருந்தவேளை இந்த அரச பயங்கரவாத சம்பவம் இடம்பெற்றுள்ளது. விடிகாலை இதை பார்த்த மக்கள் குறிப்பாக சிறுவர்கள் குழந்தைகள் முதியவர்கள் மற்றும்அங்கே தொடர்ந்து சென்று வருவபர்கள் கடுகையாக கவலை அடைந்துள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு படைக்கு அறிவிக்கப்பட்ட போதும் வாகனம் மற்றொரு இடத்தில் சேவையில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பதாகவும் தற்பொழுது தங்களால் வரமுடியாது என சொல்லப்பட்டதாகவும் இது முன்கூட்டிய இராணுவத்தால் போகவேண்டாம் என இராணுவ அதிகாரியால் சொல்லப்பட்டுயிருக்கலாம் என புத்திஜீவிகள் கருதுகின்றார்கள்.
அதனால் நல்லூர் கிட்டு பூங்காவின் முகப்பு பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.
கருத்துகள்