முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 402

 முள்ளிவாய்க்காலில் ஸ்ரீலங்கா ஆர்மி தமிழ் மக்களை கொன்றதுபோல மியான்மரில் 235 பேர் சுட்டுக்கொலை!





தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. மேலும் நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசரநிலையை ராணுவம் அறிவித்துள்ளது.

 

ஆனால் அந்த நாட்டு மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக 6 வாரங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 70 சதவீதத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் ராணுவ அரசுடன் ஒத்துழைக்க மறுத்து மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


முதல் 2 வாரங்கள் மிகவும் அமைதியான முறையில் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், போராட்டத்தை ஒடுக்க ராணுவம் அடக்குமுறையை கையாளத் தொடங்கியது முதல் இப்போது வரை தொடர்ந்து பதற்றமான சூழல் நீடிக்கிறது. ஆரம்பத்தில் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளை பயன்படுத்திய ராணுவம் பின்னர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த தொடங்கியது.


ஆனாலும் மியான்மர் மக்கள் ராணுவத்தின் அடக்குமுறை கண்டு பயந்து ஓடி ஒளியாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர். அதேசமயம் ராணுவமும் சற்றும் ஈவு இரக்கமின்றி அவர்களை தங்களது துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கி வருகிறது. இந்தநிலையில் மியான்மரில் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றயதில் இருந்து இப்போது வரை ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் 235 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சிவில் உரிமை குழு ஒன்று தெரிவித்துள்ளது.


வியாழக்கிழமை பலி எண்ணிக்கை 224 ஆக இருந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதன் மூலம் பலி எண்ணிக்கை 235 ஆக உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?