முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 469

 இதே நிலைமை நீடித்தால் தோல்வி உறுதி! ராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை






அரசாங்கத்தின் மீது மக்களுக்கு ஒரு அதிருப்தி ஏற்பட்டு வருவதாகவும் இந்த உண்மையை புரிந்துக்கொண்டு அரசாங்கத்திற்குள் இருக்கும் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளவில்லை என்றால், அடுத்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் வெற்றி பெற முடியாது எனவும் ராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.


கம்பஹாவில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாடு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


அரசாங்கத்தின் ஜனரஞ்சகம் குறைந்து போயுள்ளது. நாம் யதார்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் இருக்க வேண்டிய அரசாங்கத்திற்கு இருக்க வேண்டிய மக்கள் ஆதரவுடன் தற்போது இருக்கின்றதா?


எமக்கு ஏதோ ஒரு பிரச்சினை இருக்கின்றது. மக்கள் மத்தியில் சில பிரச்சினைகள் இருக்கின்றன. மக்கள் மத்தியில் அதிருப்தி காணப்படுகிறது. இதனை புரிந்துகொள்ள முடியவில்லை என்றால், நாம் முன்நோக்கி செல்லும் போது மேலும் கீழ் நோக்கி செல்ல நேரிடும்.


இப்படியான நிலைமையில் அடுத்த தேர்தலில் அரசாங்கம் எப்படி வெற்றி பெறும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். எமக்கிடையில் ஐக்கியம் இல்லை என்றால், அடுத்த தேர்தல் இலகுவானதாக இருக்காது. நாம் எப்படி ஆட்சிக்கு வந்தோம் என்பதை மறந்தால், அடுத்த தேர்தலில் எம்மால் வெற்றி பெற முடியாது.


எமது அணியில் இருப்பவர்கள் இதனை மறந்து போயிருக்கும் விதத்தை பார்க்கும் போது மிகவும் கவலையாக இருக்கின்றது. வியத் கம உறுப்பினர்களை எம்மவர்களே அதிகமாக விமர்சிக்கின்றனர். வியத் மக அமைப்பினரை விமர்சிப்பதானது மத்திய தர வகுப்பை சேர்ந்த தலைமுறையினரை விமர்சிக்கின்றோம் என்பதே பொருள்.


நடு நிலையாக வாக்காளர்களை இழந்து விட்டா நாம் அடுத்த தேர்தலை சந்திக்க போகின்றோம்? எனவும் நாலக கொடஹேவா கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?