முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 472

 பட வாய்ப்பு இல்லனா என்ன, வேறு வழியில் லட்ச லட்சமாய் சம்பாதிக்கும் ரம்யா பாண்டியன்.. எல்லாம் பிக்பாஸ் மாயம்!



விஜய் டிவியால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்த ரம்யா பாண்டியன் சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் லட்ச லட்சமாக சம்பாதித்து வரும் செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.   தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு நடிகையாக வந்துவிட வேண்டுமென நீண்ட நாட்களாக முயற்சி செய்து வருபவர்தான் ரம்யா பாண்டியன். ஆனால் கிடைத்தது என்னமோ ஏமாற்றம் தான். ரம்யா பாண்டியன் ஹீரோயினாக நடித்த சில படங்கள் ஓடவில்லை.

 

சோகமே சுமையாக சுற்றிக்கொண்டிருந்த ரம்யா பாண்டியனை குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவி அழைத்து பெரிய வாழ்க்கையை கொடுத்தது. அதனை தொடர்ந்து காமெடி நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு சீசன் 9க்கு ஜட்ஜாக வந்தார்.


இந்த இரண்டு நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டு பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கினார். ரம்யா பாண்டியன் தான் டைட்டில் வின்னர் என ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் கடைசியில் அவருக்கு கிடைத்தது என்னமோ விஷ பாட்டில் என்ற பட்டம் தான்.


இந்நிலையில் சமீபகாலமாக பட வாய்ப்பு இல்லை என்றாலும் ரம்யா பாண்டியன் லட்சம் லட்சமாக சம்பாதித்து கொண்டிருக்கிறாராம். அதாவது ரம்யா பாண்டியனை பேட்டி எடுக்க வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகை கொடுக்க வேண்டுமாம். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஏதாவது பொருளை விளம்பரம் வேண்டுமென்றாலும் லட்சக்கணக்கில் பில்லை போடுகிறாராம். இது கூட நல்ல ஐடியாவா இருக்கே என பல நடிகைகளும் தற்போது ரம்யா பாண்டியன் ஐடியாவை பின் தொடர ஆரம்பித்து விட்டனர்.





 


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news b890

போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் ​சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.

e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?

  துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு,  By Gokulan  2 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந

d 265 சொந்த மகளை வண்புணர்வு புரிந்த தந்தைக்கு கடூழிய தீர்ப்பு

சொந்த மகளை வண்புணர்வு புரிந்த தந்தைக்கு கடூழிய தீர்ப்பு சொந்த மகளை மதுபோதையில் பாலியல் வண்புணர்வு புரிந்த தந்தை ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று 15 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளார். மகளையே பாலியல் வண்புணர்வு புரிவது உலக நீதி, இயற்கை நீதி, சமூக நீதி என்ற அனைத்துக்கும் முரணான ஒரு குற்றச் செயலாகும். அத்தகைய குற்றத்தைப் புரிந்த குற்றவாளிக்குக் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என தனது தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்ச ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். சிறுமி சாட்சியம் சொந்த மகளை வண்புணர்வு புரிந்த தந்தைக்கு கடூழிய தீர்ப்பு | Cruel Prison For Father Abused His Own Daughter இந்தச் சம்பவம் 2015 ஆம் ஆண்டு தை மாதமளவில் மாங்குளம் பகுதியில் இடம்பெற்றதாக சட்டமா அதிபரினால் குற்றம் சாட்டப்பட்டு, தந்தையாகிய எதிரி கைது செய்யப்பட்டு, வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமி 11 வயதுடைய பாடசாலை மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கு விசாரணையின