அவுஸ்திரேலியால் வசிக்கும் இலக்கணா அவர்களால் தாயகத்தில் வாழும் மாணவர்களிற்கு பாடத்திட்டங்களிற்குத் தேவையான கற்றல் உபகரங்கள் வ ழங்கப்பட்டுள்ளது.
மேலும் தெரியவருவதாவது முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாணவர்களை ஊக்குவிப்பதற்காக திருமதி இலக்கணா அவர்களால் பெறுமதியான எழுதுபொருட்கள் மற்றும் பாடசாலை கற்றல் உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டன.
நேற்று24/03 21 பிற்பகல் ஐந்துமணியளவில் கல்வி வளர்ச்சி மேன்பாட்டுப் பொறுப்பாளர் சுமன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்இந்த கற்றல் உபகரங்கள் புதுக்குடியிருப்பு திம்பிலி கர்ணன் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மாணவர்களிற்கு வழங்கப்பட்டது.
இதில் தேவையென இனம் காணப்பட்ட 18 மாணவர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது
கருத்துகள்