முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 465

 அவரு கூட நடிக்க முடியாது.. 49 வயது முன்னணி நடிகரை ஒதுக்கிவைக்கும் சாய் பல்லவி




சாய்பல்லவியிடம் 49 வயது மதிக்கத்தக்க நடிகருடன் ரீமேக் படம் ஒன்றில் நடிக்க கேட்டதற்காக அவருடன் நடிக்க முடியாது என்று கூறியது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் அவர் ஒரு முன்னணி நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவை சேர்ந்தவராக இருந்தாலும் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாதான் தற்போது சாய்பல்லவிக்கு தாய் இடமாக உள்ளது. எக்கச்சக்கமாக பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

 

அதுவும் சாய்பல்லவி இடுப்பை வளைத்து வளைத்து ஆட்டம் போடுவது எல்லாம் தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது போல. இப்போதெல்லாம் முன்னணி நடிகர்களை விட சாய்பல்லவி நடனம் ஆடும் வீடியோக்கள் அதிக பார்வையாளர்களை பெற்று வருகிறது.தெலுங்கில் ஏற்கனவே முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சாய்பல்லவி தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க கேட்டுள்ளனர். ஆனால் அவர் மறுத்து விட்டாராம். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த அய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் மற்றும் ராணா இருவரும் நடித்து வருகின்றனர்.


இதில் ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க சாய்பல்லவியை கேட்டதற்கு ஏதேதோ காரணம் சொல்லி மறுத்து விட்டாராம். ஆனால் சாய் பல்லவி உண்மையில் பவன்கல்யானின் வயதை மனதில் வைத்து தான் வேண்டாம் என்று சொன்னதாக டோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது.


இதை கேள்விப்பட்ட பலரும் மார்க்கெட் இருக்கும் போது இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதும், மார்க்கெட் இல்லாத போது வயதான நடிகர்களுக்கு ஜோடியாவதும் வழக்கம் தானே என சகஜமாக எடுத்துக் கொண்டார்களாம்.




கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?