முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 422

 

ஜெனிவாவில் ஸ்ரீலங்காவிற்கு கொடுக்கப்பட்ட அதிர்ச்சி! எடுக்கப்பட்ட திடீர் முடிவு - கடும் கொதிப்பில் உயர்மட்டம்


ஜெனிவாவில் ஸ்ரீலங்கா மீதான பிரேரணைக்குப் பதிலளிப்பதற்காக மூன்று நிமிடங்களே வழங்கப்பட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


இந்நிலையில், அது தொடர்பான தமது அதிருப்தியை ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு அறிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.


ஐ.நா. மனித உரிமைகள் சபையில் ஸ்ரீலங்கா மீதான விவாதம் நேற்று நடைபெற்ற நிலையில் அதன் தொடர்ச்சி, இன்றும் நடைபெறவுள்ளது. அதன்பின்னர் இன்று ஸ்ரீலங்கா மீதான பிரேரணை மீது வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.


இன்றைய வாக்கெடுப்பு தொடர்பிலும், விவாதம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர்,


ஸ்ரீலங்கா மீதான பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை, ஆதாரமற்றவை. இதை அதிகமான நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.


ஸ்ரீலங்கா மீதான முதலாவது வரைவில் குறிப்பிடப்பட்டிருந்த பல விடயங்களும், இறுதியாக முன்வைக்கப்பட்ட வரைபில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.


பிரித்தானியாவின் தலைமையில் இந்தப் பிரேரணை கொண்டுவரப்பட்டிருந்தாலும், தகவல்களின் ஆதாரமற்ற தன்மை காரணமாக பிரிட்டனுக்குள்ளேயே இந்தப் பிரேரணைக்கு எதிர்ப்பு மேலெழுந்துள்ளது என்றார்.


இதேவேளை, நேற்றைய தினம் இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெறவிருந்தது. எனினும், நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்ட குழப்பத்தினால் வாக்கெடுப்பு இன்றைய தினம் ஒத்தி வைக்கப்பட்டது.


இந்தநிலையில், ஸ்ரீலங்காவிற்கு எதிராக பல நாடுகள் வாக்களிக்கக் கூடும் என்று ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் நட்பு நாடுகளின் ஆதரவுடன் இப்பேரணையை தோற்கடிக்க ஸ்ரீலங்கா கடும் பிரயத்தனத்தில் ஈடுபடுவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?