தளபதி கிட்டுவின் வரலாறு பகைவனைக்கொண்டே மீண்டெழுகிறது மீண்டும் தமிழீழத்தில்.
1985களில் யாழ் மக்களின் காவலனாக விளங்கிய வீரத்தளபதி கிட்டுவை இன்று மீண்டும் யாழ் மக்கள் நினைவுகளோடு மீட்டிப்பார்த்து விடுதலையுணர்வை ஒருகணம் நிலைநிறுத்திக்கொள்கின்றனர்.
இளைய குருத்துகள் யார் தளபதி கிட்டு என தேடித்தேடி ஆராயத்தொடங்குகின்றனர்.
விழுந்த விதைகள் ஒவ்வொன்றும் வீரியமிக்கதென்பதை வரலாறு உணர்த்தி வருகின்றது.
பகைவனே.!
உனக்கு நன்றி.
பகைவனே எம் தளபதி நினைவான அடையாளச் சின்னத்தின் எச்சத்தையும் அழித்தாய். ஆனால்
எமது நெஞ்சிலிருந்து எம் தளபதியின் நினைவுகளை அழிக்க முடியமா உன்னால்.
எம், இதய நரம்புகளில் இன்றும் விடுதலை உணர்வை மீட்டிக்கொண்டிருக்கும் நினைவுகளை அழிக்க முடியுமா?
பகைவனே நீ பற்றவைத்தது
வெறும் அடையாளச் சின்னம் அல்ல.!
எம் இலட்சியக் கனல்..
உனது கையைக்கொண்டே அதனை பற்றவைத்துள்ளார் எங்கள் தளபதி.
எம் இளைய தலைமுறை எங்கள் தளபதி கிட்டுவை இன்றிலிருந்து தேடத்தொடங்கிவிட்டது.
அந்தத் தடத்திலிருந்து புதுப்புலிகள் உருவாகுவார்கள்.
இது உனக்கு தளபதி கிட்டு வைத்த செக்மேற் என்பதை வரலாறு உணர்
கருத்துகள்