முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 464

 ஜெனிவா தீர்மானத்தை அமுல்படுத்த எவரும் கட்டாயப்படுத்த முடியாது - சரத்வீரசேகர இறுமாப்பு




ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், அது இலங்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.


தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் யு.என்.எச்.ஆர்.சி யின் பரிந்துரைகளை அமுல்படுத்த இலங்கைக்கு கட்டாயமில்லை என்றும் அதை கட்டாயப்படுத்த மனித உரிமைகள் பேரவைக்கு அதிகாரம் இல்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது யு.என்.எச்.ஆர்.சியின் தீர்மானம் 30/1 ற்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியதாக வீரசேகர தெரிவித்தார்.ஆனால் தற்போதைய அரசாங்கம் அந்த தீர்மானத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதால் யு.என்.எச்.ஆர்.சி அத்தகைய அழுத்தத்தை செலுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.


இன்று (28) நடைபெற்ற நிகழ்வின்போது போது அவர் இதனைத் தெரிவித்தார்.


இந்த தீர்மானத்தை சமர்ப்பித்த நாடு மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளில் 25 நாடுகளின் ஆதரைவப் பெறத் தவறிவிட்டதாகவும், அதன்படி தீர்மானம் பெரும்பான்மையான உறுப்பினர்களின் அனுமதியின்றி நிறைவேற்றப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.


இதேவேளை வீரசேகரரின் நடவடிக்கைகளும் அவரது அண்மைய முஸ்லிம் விரோத கருத்துக்களும் பெரும்பான்மையான முஸ்லிம் நாடுகள் தீர்மானத்தில் வாக்களிப்பதைத் தடுக்க உதவியது என்று சில கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.


குறிப்பாக புர்காவை தடைசெய்யும் முயற்சியே இதற்கு காரணம் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


எனினும் அதில் எந்தவித உண்மையும் இல்லை என்று சரத் வீரசேகர தெரிவித்தார்.


பாகிஸ்தான், சோமாலியா, பங்களாதேஷ் உள்ளிட்ட எத்தனை முஸ்லிம் நாடுகள் புர்காவை தடை செய்வதற்கான திட்டம் இருந்தபோதிலும் இலங்கைக்கு ஆதரவாக இருந்தனவே என்று அவர் கேள்வி எழுப்பினார்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?