ஐ.நாவில் நிறைவேறிய ஸ்ரீலங்காவிற்கு எதிரான தீர்மானம்! நன்றி தெரிவித்த வதிவிடப் பிரதிநிதி
ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாக ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஆதரவளித்த இணைத்தலைமை நாடுகள் குழுவின் ஏனைய நாடுகளுக்கும் ஜெனீவாவிற்கான பிரித்தானியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஜூலியன் ப்ரெய்த்வெய்ட் (Julian Braithwaite) நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது ருவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவின் மனித உரிமைகள் தொடர்பான, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு தொடரும் என்பது முக்கியமானதாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்