முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 433

 நடத்தையில் சந்தேகம்: மனைவியின் பிறப்புறுப்பை அலுமினியம் வயரால் தைத்த கொடூரன்!




திருமண பந்தத்திற்கு வெளியே உறவு கொண்டிருப்பதாக தமது மனைவியை சந்தேகித்த உத்தரப் பிரதேச ஆண் ஒருவர் மனைவியின் பிறப்புறுப்பை அலுமினியம் வயர் கொண்டு தைத்ததாக திங்களன்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த சம்பவம், உத்தரப் பிரதேசத்தில் உள்ள ராம்பூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழ்ந்துள்ளது.


கைது செய்யப்பட்ட அந்த ஆண் தமது மனைவியைத் தாக்கி, அவரது பிறப்புறுப்பைத் தைத்த பின்பு அவரது வீட்டில் இருந்து தப்பியோடிவிட்டார் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


மிகுந்த வலியில் இருந்த அந்த மனைவி அருகில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் தமது தாயாரிடம் அலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.


உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைப்பதற்கு அழைப்பு விடுத்த அவரது தாயார், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தார்.


 


முதலில் அருகிலுள்ள உள்ளூர் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்தப் பெண், பின்பு மேலதிக சிகிச்சைக்காக கூடுதல் வசதியுடைய அரசு மருத்துவமனைக்கு பின்னர் அழைத்துச் செல்லப்பட்டார்.


பிறப்புறுப்பு அலுமினியம் வயரால் தைக்கப்பட்ட அந்த பெண் மிகுந்த வலியுடன் மருத்துவமனைக்குச் செல்லும் காணொளிகளும் வெளியாகியுள்ளன.


பெண் - சித்தரிப்புப் படம்

அதில் அவரது தாய் மற்றும் இன்னொரு பெண் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்குள் அழைத்துச் செல்கின்றனர்.


கைது செய்யப்பட்ட ஆணின் காணொளியைப் பதிவு செய்த உத்தரப் பிரதேச காவல் துறையினர் அதை வெளியிட்டுள்ளனர்.


“எனது மனைவி கிராமத்தில் உள்ள பிற ஆண்களை சந்தித்து வந்தார். அவர்களுடன் முறையற்ற உறவு கொண்டிருந்தார். அது குறித்து கேள்வி எழுப்பிய நான் அது சரி இல்லை என்று அவரிடம் கூறி வந்தேன். அவருக்கு தேவையானவற்றை வழங்க எந்த முயற்சியும் நான் கைவிடவில்லை. ஆனால் நான் மிகுந்த கோபமுற்ற நேரத்தில், அலுமினியம் வயரை எடுத்து அவரது பிறப்புறுப்பைத் தைத்து விட்டேன்,” என்று அந்தக் காணொளியில் அவர் கூறுகிறார்.


தங்களுக்கு இந்த நிகழ்வு குறித்த தகவல் கிடைத்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாகவும் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள காயங்களின் அடிப்படையில் அவரது கணவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ராம்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷோகன் கௌதம் காவல்துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் காணொளி மூலம் தெரிவித்துள்ளார்.



கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?