முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 411

 ஜெனிவாவில் ஆதரவு கோர அனைத்து பாரம்பரியங்களையும் புறக்கணித்த வெளிவிவகார செயலர் -அம்பலத்திற்கு வந்த தகவல்



பாரம்பரியங்களை புறக்கணித்த வெளிவிவகார செயலாளர் கொலம்பகே கொழும்பில் அமைந்துள்ள ரஷ்ய தூதரகத்திற்கு நேரில் சென்று ஜெனிவாவில் ஆதரவளிக்குமாறு உதவிகோரியுள்ளதாக கொழும்பிலிருந்த வெளிவரும் ஆங்கில நாளிதழி தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


கடந்த புதன்கிழமை வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே அனைத்து பாரம்பரியங்களையும் புறக்கணித்துவிட்டு பௌத்தலோக மாவத்தையிலுள்ள நன்கு பாதுகாக்கப்பட்ட ரஷ்ய தூதுரகத்திற்கு சென்றார்.


அவருடன் வெளிவிவகார அமைச்சின் மற்றுமொரு அதிகாரியும் சென்றிருந்தார்.இவர்கள் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மட்டேரியை சந்தித்தனர்.


முன்னய சோவியத்யூனியனில் இடம்பெற்றிருந்த நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக செயற்படவேண்டும் என ரஷ்யா பரப்புரை செய்யவேண்டும் என கேட்டுக்கொள்வதே இந்த சந்திப்பின் நோக்கம்.


உதவியை கோருவதற்காக இலங்கையின் வெளிவிவகார செயலாளர் கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதரகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை இதுவே முதல்தடவையாகும்.


அவசர தேவைகளின் போது குறிப்பிட்ட இராஜதந்திரியை வெளிவிவகார அமைச்சிற்கு அழைப்பதே பாரம்பரியமாக இதுவரை காணப்படுகின்றது.


இலங்கைக்கு அவசரதேவையிருந்திருந்தால் வெளிவிவகார கொள்கை மற்றும் வெளிவிவகார உறவுகளுக்கு பொறுப்பான வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்ட நாட்டின் இராஜதந்திரிக்கு அவ்வாறான அழைப்பை விடுத்திருக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?