முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 435

 கணவரை கொன்று வீட்டு தோட்டத்தில் புதைத்த பெண், கள்ளக்காதலனுடன் தலைமறைவிலிருந்தார்!





விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் காலனியை சேர்ந்தவர் லியோபால் (வயது 33). வேன் டிரைவர். இவரது மனைவி சுஜித்ராமேரி (24). இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன், 3 வயதில் ஒரு மகள் என்று 2 குழந்தைகள் உள்ளனர்.

 

இந்தநிலையில், கடந்த மாதம் 3-ந்தேதி, சுஜித்ராமேரி, சென்னையில் உள்ள தனது மாமனார் சகாயராஜை செல்போனில் தொடா்பு கொண்டு, புதுச்சேரியில் நடந்த திருமண விழாவுக்கு சென்ற லியோபால் 4 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.


அப்போது நான் நேரில் வருகிறேன், போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார் அவரது மாமனார்.


வீட்டு தோட்டத்தில்உடல் புதைப்பு


அதன்படி சகாயராஜ் வீட்டுக்கு வந்தபோது சுஜித்ரா மேரியை அங்கு காணவில்லை. குழந்தைகள் மட்டும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். இதனால் சகாயராஜிக்கு தனது மருமகள் மீது சந்தேகம் ஏற்பட்டது.


இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்த போது, அவர்களது வீட்டு தோட்டத்தில் புதிதாக பள்ளம் தோண்டியபடி கிடந்தது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அந்த இடத்தை போலீசார், தோண்டி பார்த்த போது லியோபால் புதைக்கப்பட்டு பிணமாக இருந்தார்.


கல்லூரி மாணவனுடன் கள்ளக்காதல்


தொடர்ந்து நடத்திய விசாரணையில், சுஜித்ராமேரிக்கும், அவரது வீட்டின் அருகே வசித்து வரும் ராதாகிருஷ்ணன்(20) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.


தற்போது ராதாகிருஷ்ணன் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் லியோபாலுக்கு தெரியவரவே, அவரை இருவரும் சேர்ந்து கொலை செய்து வீட்டு தோட்டத்தில் புதைத்து விட்டு, தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.


கேரளாவில் பதுங்கல்


தலைமறைவான கள்ளக்காதல் ஜோடியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அதில், ராதாகிருஷ்ணனின் உறவினர்கள் கேரளாவில் வசித்து வருவதும், அங்கு இவர்கள் சென்று தங்கி இருப்பதும் தெரியவந்தது.


இதையடுத்து தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த சுஜித்ரா மேரி, ராதாகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்து, விக்கிரவாண்டிக்கு அழைத்து வந்தனர்.

 

கைதான ராதாகிருஷ்ணன் போலீசார் அளித்த வாக்குமூலத்தில், ‘ஏற்கனவே ஒருவரை அடித்துக் கொலை செய்த பாணியை பின்பற்றி லியோபாலை தீர்த்து கட்டினேன்’ என்று கூறியுள்ளார். அந்த கொலை குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?