நயன்தாராவுக்கும் உதயநிதிக்கும் ரகசிய உறவு இருப்பது உண்மைதான்.. கற்பூரத்தில் சத்தியம் செய்த பிரபலம் !
68 வயது மதிக்கத்தக்க பிரபலமான நடிகர் ஒருவர் சமீபகாலமாக நயன்தாராவை பற்றி கொச்சையாக பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். என்னதான் உண்மையாக இருந்தாலும் இப்படியா ஓபன் ஆக சொல்வது என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.
தற்போது அரசியல் பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் பிரச்சாரங்கள் முடிவடைய உள்ள நிலையில் ஆங்காங்கே ஒரு கட்சியை பற்றி இன்னொருவர் மாறி மாறி திட்டி பேசி ஓட்டு கேட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஒரு காலத்தில் திமுகவிலிருந்த ராதாரவி நடிகை நயன்தாராவை பற்றி கொச்சையாக பேசியதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு தற்போது பிஜேபிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும்போது நயன்தாராவைப் பற்றி பேச விருப்பமில்லை என்று கூறிவிட்டு மிக முக்கியமான விஷயத்தை மீண்டும் குச்சி விட்டு விலகியுள்ளார். அது தான் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நயன்தாராவைப் பற்றி நான் தவறாக பேசியதாக திமுகவினர் தன்னை நீக்கி விட்டதாகவும், நயன்தாரா என்ன திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரா? எனவும் கேள்வி எழுப்பினார். நயன்தாராவுக்கும் கட்சிக்கும் என்ன உறவு என்பதை கூறுங்கள் எனவும் கேட்டுள்ளார்.
உதயநிதிக்கும் நயன்தாராவுக்கும் உறவு இருந்தால் அதற்கு நான் என்ன பண்றது எனவும் ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார் ராதாரவி. ஏற்கனவே உதயநிதி மற்றும் நயன்தாரா இருவருக்கும் இடையில் ஒரு உறவு நீண்ட காலமாக இருந்து வருவதாக பல பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அதை அவர் அழுத்தம் திருத்தமாக கூறுவது அவர்கள் மீதான சந்தேகத்தை அதிகரித்துள்ளது.
இன்னும் எலக்சன் நெருங்க நெருங்க யாரைப்பற்றி என்னென்ன உண்மைகள் எல்லாம் வரப்போகிறதோ என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். நீ கலக்கு சித்தப்பு!
கருத்துகள்