முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 442

 விரலில் மோதிரம் விக்னேஷ் சிவன் நெஞ்சில் கை :போஸ் கொடுத்த நயன்தாரா.. நிச்சயம் ஆயிருச்சு போல!




நீண்ட நாட்களாகவே கோலிவுட் வட்டாரங்களில் உலா வரும் செய்தி என்னவென்றால் விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா என்பது தான். விரைவில் இருவரும் சீக்கிரம் பிரிந்து விடுவார்கள் எனவும் கூறி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா பல்வேறு காதல் தோல்விகளுக்கு பிறகு கடைசியாக இயக்குனர் விக்னேஷ் சிவனை நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார்.

 

இருவரும் செல்லுமிடமெல்லாம் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு பழைய காதலர்களை வெறுப்பேற்றி வருகின்றனர். அதனை பார்த்த ரசிகர்கள் இதேபோல் நயன்தாரா எத்தனை ஹீரோக்களுடன் ரொமான்டிக் போஸ் கொடுத்துள்ளார் தெரியுமா என கிண்டலடித்தனர்.


ஆனால் விக்னேஷ் சிவன் அதையெல்லாம் ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. நான் நயன்தாராவின் காதலர், அவ்வளவுதான் என கெத்தாக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே இருவரும் திருமணம் செய்து கொண்டதாக வதந்திகள் கிளம்பின.


ஒரு சிலர் இவர்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் எனவும், விரைவில் இருவரும் பிரிந்து விடுவார்கள் எனவும் சூடம் ஏற்றி சத்தியம் செய்ததை பார்த்து பார்த்திருக்கிறோம். ஆனால் தங்களைப் பற்றிய தவறான நெகட்டிவ் விமர்சனங்களை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சரியான பதிலடி கொடுத்துள்ளனர்.


நீண்ட நாட்களுக்கு பிறகு நயன்தாரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விக்கி நயன் என்ற பெயருடன் கையில் மோதிரம் போட்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார். இதன் மூலம் இருவரும் நிச்சயம் செய்து கொண்டார்களா அல்லது நயன்தாரா அடிப்படையில் கிரிஸ்டியன் என்பதால் அந்த முறையில் திருமணம் செய்து கொண்டார்களா எனவும் கோலிவுட் வட்டாரங்களில் எழுந்த சந்தேகம் காட்டு தீ போல் பரவி வருகிறது.





கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?