முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 443

 NSW:வேலையில் சேர்வதற்காக சென்றபோது வெள்ளத்தில் மூழ்கிப் பலியான இளைஞன்!



நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் அகப்பட்டு மரணமடைந்த இளைஞர் பாகிஸ்தானைச் சேர்ந்த Ayaz Younus என்ற மென்பொருள் பொறியியலாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


25 வயதான Ayaz Younus, சிட்னி வடமேற்கில் கிடைத்த ஒப்பந்த வேலையொன்றில் இணைவதற்காக சென்றுகொண்டிருந்தபோது Cattai Ridge Road, Glenorie பகுதியில் வைத்து அவரது கார் வெள்ளத்தில் மூழ்கியது.


Ayaz Younus உடனடியாக அவசரசேவைப்பிரிவினரைத் தொடர்புகொண்டு தன்னை மீட்குமாறு கோரிக்கைவிடுத்திருந்ததாகவும், மீட்புப்பிரிவினர் குறித்த இடத்திற்குச் சென்றபோது காரினுள்ளேயே அவர் மரணமடைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.



Ayaz Younus பயணம் செய்தது ஒரு வாடகைக்கார் எனவும் ஏதோவொரு காரணத்தினால் அவரால் காரைவிட்டு வெளியேறமுடியாமல் இருந்திருக்கிறது எனவும் இதுதொடர்பில் ஆராயப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை Ayaz Younus-இன் மரணம் தொடர்பில் பாகிஸ்தானிலுள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினரின் கோரிக்கைக்கிணங்க அவரது உடலை பாகிஸ்தான் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் Pakistan Association of Australia-இன் தலைவர் Farhat Jaffri தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?