முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news 881

 இலங்கையில் கொரோனா உயிரிழப்பு 1200 ஐ கடந்தது  இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இறுதியாக 32 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1210ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 18 பேர் பெண்கள் என்பதுடன், எஞ்சிய 14 பேரும் ஆண்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 29 முதல் 92 வயதுக்கு இடைப்பட்ட 32 பேரே இவ்வாறு கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 23ம் திகதி முதல் இந்த மாதம் 22ம் திகதி வரையான காலப் பகுதிக்குள் உயிரிழந்த 27 கொவிட் தொற்றாளர்களின் விபரங்களும் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாட்டில் நேற்றைய தினம் (23) கொவிட் தொற்றினால் உயிரிழந்த 5 பேரின் தகவல்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

TAMIL Eelam news 780

 33 ஓட்டங்களால் இலங்கை அணியை பங்களாதேஷ் அணி வீழ்த்தியது இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 33 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 257 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்ப்பில் முஸ்பிகூர் ரஹீம் 84 ஓட்டங்களையும், மஹ்மதுல்ல 54 ஓட்டங்களையும் அணியின் தலைவர் தமீம் இக்பால் 52 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் தனஞ்சய த சில்வா 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 224 ஓட்டங்களைப் மாத்திரமே பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்க 74 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்று கொண்டார். பந்து வீச்சில் மொஹமட் ஹசன் 4 விக்கெட்டுக்களையும், மொஹமட் ரஹ்மான் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். அதன்படி, மு

TAMIL Eelam news 879

 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல் மட்டக்களப்பு- நாகர்வட்டை கடற்கரையில் கடந்த 18 ஆம் திகதி, நீதிமன்ற தடை உத்தரவை மீறி தீபச்சுடர் ஏற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்த 10 பேரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு வாழசை்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடை விதிக்குமாறு லவக்குமார் என்பவருக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெற்ற பொலிஸார். அதனை கையளிப்பதற்கு மூன்று முறை சென்றப்போதும், அவர் இல்லாதமையினால் அவருடைய மனைவியிடம் கையளித்தப்போதும் அவரும் பெறுவதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். இதனால் லவக்குமார் வீட்டின் கதவில் அந்த நீதிமன்ற தடை உத்தரவை பொலிஸார் ஓட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இவ்வாறு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட அவர், கடந்த 18 ஆம் திகதி 10 பேருடன் சென்று, நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச்சுடர் ஏற்றி கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். குறித்த நிகழ்வினை முகநூலிலும் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்நிலையில் சம்பவம் அறிந்த பொலிஸார் அவர்களை கைது ச

TAMIL Eelam news 878

 தமிழ் புறக்கணிப்பை” இலங்கையரசிடமிருந்தே சீனர்கள் கற்றுக்கொண்டுள்ளனர் -மனோ கணேசன் தற்போது சமூக ஊடகங்களில் உலாவும் தமிழ் இல்லாத, சிங்களம், சீனம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் மட்டும் கொண்ட ஒரு பெயர் பலகை படம், ஒரு வருடத்துக்கு முன்பே அகற்றப்பட்டு விட்டது என சீன தூதரகம் எனக்கு தெரிவித்துள்ளது. எனினும் இதுபற்றி யோசித்து பார்த்தால், தமிழ் மொழியை புறக்கணிக்க சீனர்கள், இலங்கை அரசிடம்தான் பாடம் படித்துள்ளனர் போல் தெரிகிறது. சட்டத்துக்கு வரைவிலக்கணம் தரும் பொறுப்பை கொண்டிருக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்தில், மொழி சட்டத்தை மீறும் வகையில், தமிழுக்கு பதில் சீன மொழியை எழுதி, திறன் நூலகத்தை சட்டமா அதிபரே திறந்து வைக்கிறார். இப்போது, எமது எதிர்ப்புகளின் பின் அது மாற்றப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால், நடந்த “சட்டமா” குளறுபடிக்கு காரணம் யார்? சட்டமா அதிபர் திணைக்களமா? சீன தூதரகமா? இலங்கை அரசா? எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. இந்நிலை தொடருமானால், இலங்கை-சீன அரசுகளுக்கு எதிராக நாம் மொழி போராட்டத்தை கொழும்பு தெருக்களில், துறைமுக நகருக்குள்ளேயே சென்று ஆரம்பிக்க வேண்டி வரும் கூறி வைக்க விரும்புகிறேன் என தமி

TAMIL Eelam news 877

                                                 தன் வாழ்நாளை தாய்நாட்டின் விடியலுக்காக அர்ப்பணித்த “தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ படைத்துறை வரைபடத் தளபதி ”  பிரிகேடியர் சசிகுமார் அவர்கள் . ஆண்டுகள் பத்து. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னரும், எதிரிகளின் படைப் பலம் , படைக் கட்டமைப்புக்கள் போன்றவற்றினைத் தெரிந்து தகவல் கொடுக்கவும் , எதிரியின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்துப் பின் போராளிகளின் நடவடிக்கை சமர்களுக்கான தகவல்களை வழங்குவதற்கும் வேவுப்பிரிவு தேசியத்தலைவரால் உருவாக்கபட்டது. அதற்காக அல்லும் பகலும் தன் உழைப்பாலும் போராளிகளின் ஈகத்திற்க்கு உயிர்கொடுத்து வரைபடைமுலம் உயிரோட்டம் கொடுத்தவர்களில் பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் பங்கும் அளப்பெரியது என்றால் மிகையாகாது. தேசியத்தலைவரின் வழிகாட்டலில் இத் தளபதியில் வளர்ப்பில் வார்த்தெடுத்த பல போராளிகள் , தங்கள் ஈகத்தால் எம் தாய்மண்ணில் பல சரித்திரம் எழுதி சென்றார்கள். பின் தளத்தில் சென்று குறைந்த இழப்பில் , பல வழிகளை தன் வரைபடம் நேர்த்தியான ஆற்றல் மூலம் வடிவமைத்து திட்டமிட

TAMIL Eelam news 876

 அண்ணன் பிரபாகரனுக்கு அடுத்த பெயர் அண்ணன் பிரபாகரனுக்கு அடுத்து பெயரை கேட்டவுடன் சிங்களன் சிறுநீர் கழித்தான் என்றால் அது பிரிகேடியர் பால்ராஜ் அண்ணாவாகதான் இருக்கமுடியும் ,உலக இராணுவ வல்லுநர்களால் புலிகளால் ஒருகாலமும் கைப்பற்ற முடியாது என்று கணிக்கப்பட்ட ஆணையிறவு படைத்தளத்தை கைப்பற்ற தாக்குதல் திட்டம் தலைவரால் வகுகக்கப்படுகிறது  திட்டத்தை செயல்படுத்தி படையை வழிநடத்த தலைவர் அவர்களால் பால்ராஜ் அண்ணா நியமிக்கப்படுகிறார் சண்டை தொடங்கி இருபுறமும் தாக்குதல் உக்கிரமாக நடந்துகொண்டு இருக்கின்றது கொழும்பில் சிங்கள ராணுவ உயர்மட்டதில் இருந்து போரை வழிநடத்தும் சிங்கள ராணுவ மேஜருக்கு தொலைபேசி அழைப்பு வருகின்றது  அந்த உரையாடல் இவ்வாறாக நடக்கின்றது 20,000 ஆமியை வைத்துக்கொண்டு வெறும் 2,000க்கு குறைவான புலிகளை உன்னால் வெற்றி கொள்ள முடியவில்லையா நீ யெல்லாம் என்ன ——க்கு ராணுவத்துக்கு வந்தே என்று அதற்கு அந்த களமுனை மேஜர் சொல்லுகிறார் புலிகளின் தாக்குதலை முன்னின்று வழிநடத்துவது பிரபாகரன் என்றால் கூட நாம் பிழைத்துக்கொள்ள சிறுதுளியோனும் வாய்பிருக்கின்றது  ஆனால் சண்டை களத்தில் நிற்பது பால்ராஜ் அவன் வந்து உட்காந

TAMIL Eelam news 875

 ரெஜினாவுக்கு இத செஞ்சா மட்டும் பிடிக்காதாம்.. இந்த மாதிரி பசங்களை தான் ரொம்ப பிடிக்குமாம்! கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ரெஜினா கெஸன்ட்ரா. கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை மிகவும் பிரபலமானார் அதற்கு காரணம் இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.   தெலுங்கு சினிமாவில் பல படங்கள் நடித்து வந்த ரெஜினா அதன் பிறகு தமிழிலும் எப்படியாவது நிரந்தரமான இடத்தைப் பிடிக்க வேண்டும் என நினைத்து மாநகரம் போன்ற ஒருசில கதையம்சம் உள்ள படங்களில் நடித்தார்.   எப்போதுமே சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரெஜினாவிடம் ரசிகர்கள் பல கேள்வி கேட்பது வழக்கம். அதே போல் அவரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர்.  தற்போது ரெஜினாவிற்கு இந்த ஒரு விஷயம் மட்டும் பிடிக்கவே பிடிக்காது என அவரது நம்பகத்தன்மை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் கல்லா கட்டி வரும் நடிகைகளில் ரெஜினா ஒரு முக்கியமானவர். இவருக்கு ஈகோ உள்ள பசங்களை சுத்தமாக பிடிக்காதாம். அதேசமயம் உண்மையும் நேர்மையும் உள்ள