முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 938 தமிழர் பகுதியில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே பலியான இளம் குடும்பஸ்தர்

 

தமிழர் பகுதியில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே பலியான இளம் குடும்பஸ்தர்

தமிழர் பகுதியில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே பலியான இளம் குடும்பஸ்தர் | Young Family Member Died On An Accident Jaffna

 By Dilakshan 1 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,பள்ளமடு வைத்தியசாலையில் இருந்து சற்று தொலைவில் நேற்று(19) இரவு குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், சிறிய ரக பேருந்து ஒன்று மன்னார் யாழ் பிரதான வீதியூடாக பயணித்த போது துவிச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் மீது குறித்த பேருந்து மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இலஞ்சம் கோரி கைதான அரச உத்தியோகத்தர்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

இலஞ்சம் கோரி கைதான அரச உத்தியோகத்தர்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு


காவல்துறையினின் அடாவடி

இதன் போது கோயில் குளம் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு,அதே கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


விபத்து இடம்பெற்ற பகுதி அடம்பன் காவல்துறை பிரிவுக்குட்பட்டதாக காணப்பட்ட போதும், இலுப்பைக்கடவை காவல் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து உண்மை நிலையை அறிந்து கொள்ளாது உயிரிழந்த மற்றும், படு காயமடைந்தவர்களின் உறவினர்கள் அவ்விடத்தில் கூடிய போது அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணைகள்

அத்துடன், விபத்தை ஏற்படுத்திய தனியார் போரூந்தையும், அதன் சாரதியையும் மீட்டு இலுப்பைக்கடவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழர் பகுதியில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே பலியான இளம் குடும்பஸ்தர் | Young Family Member Died On An Accident Jaffna

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அடம்பன் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்ததோடு, விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விபத்து இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த இலுப்பைக்கடவை காவல் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் இலுப்பைக்கடவை காவல்துறையினரின் நடவடிக்கை குறித்து விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியாக இலுப்பைக்கடவை காவல் நிலைய பொறுப்பதிகாரி ஏக்கநாயக்க பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அவருக்கு எதிராக பல்வேறு முறைப்பாடுகள் மன்னார் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும்,இலுப்பைக்கடவை காவல்துறை பிரிவில் மணல் மண் கடத்தல் காரர்களிடம் பாரிய அளவில் லஞ்சம் பெற்று மணல் வியாபரத்திற்கு அனுமதியை இலுப்பைக்கடவை காவல் நிலைய பொறுப்பதிகாரி ஏக்கநாயக்க வழங்கி வருவதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?