தமிழீழப்பகுதியில் இளைஞர்களை அழிக்கும் வேலையில் அரசகைக்கூலிகள் தீவிரம் முதியவர்கள் தெரிவிப்புயாழில் பரிதாபமாக உயிரிழந்த 29 வயதான இளைஞன்! வெளியான திடுக்கிடும் காரணம்
Sri Lanka PoliceSri Lankan TamilsJaffnaDrugs
2 மணி நேரம் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
யாழ்ப்பாணத்தில் அதிக ஹெரோயின் பாவனை காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்றைய தினம் (31-01-2024) இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த சம்பவத்தில் இருபாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த 29 வயதான கணேசன் நிஷாந் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபர் நேற்றிரவு உணவருந்தி விட்டு தூக்கத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் உள்ளவர்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் அவரை அவதானித்தவேளை அவர் அசைவற்று காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் காலை 5 மணியளவில் அவரை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
கருத்துகள்