முகநூலில் பதியப்பட்ட ஒரு ஈழத்தமிழன்கவிதைமாவீரன்
ஈழம் எழுதிட
உயிர் எழுத்தை
ஈன்ற மெய்யின் மெய்…
இனத்தை காத்திட
கர்வம் அணிந்த
தேசபிமாணிய சீருடை…
உரிமையைக் கேட்டு
பறையொலி எழுப்பிய
குரலின் முரசு….
கணிதக் கண்கள்..
கவரும் கருத்து..
போர்கள வானம்..
பொக்கிஷ ஞானம்..
பார்த்திட உறைந்தது ஞாலம்..
புடமிட மலர்ந்தது ஈழம்..
சிந்தனை நெற்றி..
சிகரத்தின் யுத்தி..
சிறுத்தையின் வேகம்..
சிறகின் விவேகம்…
சீண்டிய எதுவம் பதுங்கிடும் சினங்கண்டு
சிரித்திட இரசித்திடும் குழந்தையும் குணம்கண்டு
எரியும் தீயாய் எண்ணம்..
எதிர்பவன் ஏங்கிடும் துணிவு..
எண்திசை ஆளும் அறிவு..
மண்ணை மீட்க்கும் கனவு..
புதுமொழி பேசும் நிபுணன்..
புலனுக்கு நிகரில்லை எவனும்..
அணுகுண்டு தாங்கும் அங்கம்..
அவன்வர பதுங்கிடும் சிங்கம்..
நடந்திட பாதம்
நடுங்கிடும் பூமி…
நம்பியவர்க்கெல்லாம்
வழங்கிய சாமி…
எத்தனை தடையும்
எத்திட பறக்கும்..
ஏவிடும் வார்த்தையில்
வான்படை பிறக்கும்..
வஞ்சனை வலையில்
சிக்காத நதியன்..
தந்திர தலைகளும்
குழப்பிடும் மதியின்..
மந்திர செயலை தாப்பாக்கி…
இலக்குக்கு குறிவைக்கும் துப்பாக்கி..
மக்களில் ஒருவர்
மண்ணில் தலைவர்
தமிழினம் ஊண்டிய கொடி மரமிவர்
தாய்மண் வளர்த்த செடி மாவீரன
சதுங்க ஆட்டத்தில்..
சத்திய வேட்டையில்..
புலியின் நிழலில் நரிகள் …
பலியாய் போனது புலிகள்..
துரேகக் குழியி்ல்
குகையாய் மறைந்தான
மரித்தான
மாவீரன்?????
கனவுகளில் வாழ்ந்தால் கலைந்திருக்கலாம்
கனவுகளுக்காய் வாழ்ந்ததால்
பல மனங்களில் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்….🥰
கருத்துகள்