மட்டக்களப்பில் அதிகாலை 4 பிள்ளைகளின் தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்!
Sri Lanka PoliceBatticaloaElephantSri Lanka Elephants
4 மணி நேரம் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
மட்டக்களப்பில் உள்ள பகுதியொன்றில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்றையதினம் (31-01-2024) அதிகாலை கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகநேரியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் 4 பிள்ளைகளின் தாயான குடா முனைக் கல் வாகநேரியைச் சேர்ந்த 43 வயது அப்புசிங்கம் சாந்தினி என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்று அதிகாலை காலைக் கடனுக்காக அருகில் உள்ளகாட்டுப் பகுதிக்கு சென்றவரை பற்றைக்காட்டுக்குள் மறைந்திருந்த யானை துரத்தி தாக்கியுள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கையினை பொலிசார் மெற்கொண்டிருந்தனர்.
மேலும், கோறளைப்பற்று திடீர் மரண விசாரணை அதிகாரி வ.ரமேஸ்ஆனந்தன் மரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
கருத்துகள்