அபாயகரமான நிலையில் யாழ்ப்பாணம்... ஒரே வாரத்தில் 13 சிறுவருக்கு ஏற்பட்ட நிலை!
Sri Lankan TamilsJaffnaMinistry of Health Sri LankaDengue Prevalence in Sri Lanka
3 மணி நேரம் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
யாழ்ப்பாணம் - சுதுமலை பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் 21 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 13 பேர் 10 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், குறித்த பகுதிகளில் பொது சுகாதார பரிசோதகர் ம.ஜெயபிரதீப் தலைமையில் அப்பகுதி கிராம சேவையாளர், டெங்கு தடுத்து உத்தியோகஸ்தர்கள் இணைந்து வீட்டு தரிசிப்பில் ஈடுபட்டனர்.
அதன்போது டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழலை வைத்திருந்த 23 குடியிருப்பாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை துண்டு வழங்கப்பட்டது.
நுளம்பு குடம்பிகள் காணப்பட்ட வளாக குடியிருப்பாளர்கள் 4 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மன்றில் முன்னிலையான மூவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர்களுக்கு தலா 4,500 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.
இதேவேளை, நீதிமன்றில் முன்னிலையாகாத குடியிருப்பாளருக்கு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நுளம்பு பரவ கூடிய சூழல் காணப்பட்ட வெற்று காணி உரிமையாளர்களுக்கு, அக்காணிகளை துப்பரவு செய்வதற்கு 07 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள்