முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 939 புலம்பெயர்தலை எதிர்க்கும் கனேடிய அரசியல்வாதிகள்

 

புலம்பெயர்தலை எதிர்க்கும் கனேடிய அரசியல்வாதிகள்

புலம்பெயர்தலை எதிர்க்கும் கனேடிய அரசியல்வாதிகள் | Canada Emigration Politicians Oppose Immigration

 By Dilakshan 4 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

கனடாவில் புலம்பெயர்தலானது, பேசு பொருளாகியுள்ள நிலையில், அரசியல்வாதிகள் புலம்பெயர்தலை எதிர்ப்பதை செய்திகள் மூலம் அறிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.

அத்தோடு, வீடுகள் பற்றாக்குறைக்கு புலம்பெயர்தல்தான் காரணம் என சில அமைச்சர்கள் குற்றம் சாட்ட, புலம்பெயர்வோரை வரவேற்கும் நீங்கள், அதற்கேற்ப வீடுகளைக் கட்டவேண்டாமா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப சில நாட்களாக கனடா அரசியலே புலம்பெயர்தலை மையமாக காணப்படுகிறதாக கூறப்படுகிறது.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இன்னும் ஆரம்ப கட்டத்திலே..! சுட்டிக்காட்டிய ஐ.எம்.எப்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இன்னும் ஆரம்ப கட்டத்திலே..! சுட்டிக்காட்டிய ஐ.எம்.எப்


புலம்பெயர்வு

அதேபோல், கனடா அரசும், அரசியல்வாதிகளும்தான் இப்படி புலம்பெயர்தலுக்கெதிரானவர்களாக இருக்கிறார்கள் என்றால், கனடா மக்களில் ஒரு பகுதியினரும் புலம்பெயர்தலுக்கு எதிராக இருப்பது சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

புலம்பெயர்தலை எதிர்க்கும் கனேடிய அரசியல்வாதிகள் | Canada Emigration Politicians Oppose Immigration

சமீபத்தில் ஆய்வமைப்பொன்று நவம்பர் மாதம் மேற்கொண்ட ஆய்வில் வெறும் 9 சதவிகித கனேடியர்கள் மட்டுமே, பெரும் எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வருவதை ஆதரிக்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

கனடாவின் மக்கள்தொகை

அத்துடன், 43 சதவிகிதம் பேர், இப்போது இருக்கும் எண்ணிக்கையிலேயே புலம்பெயர்வோர் வருகை இருக்குமானால் தங்களுக்குப் பிரச்சினையில்லை என்று கூற, 39 சதவிகிதம் பேர், குறைந்த எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வந்தால் போதும் என நினைக்கின்றார்கள்.


இந்நிலையில் குறித்த ஆய்வில், 72 சதவிகித கனேடியர்கள் கனடாவின் மக்கள்தொகை அதிகரிப்பதில் புலம்பெயர்ந்தோரின் பங்கு முக்கியமானது என கருதும் நிலையில், அதே எண்ணிக்கையிலானவர்கள், அதாவது, 75 சதவிகித கனேடியர்கள், வீடுகள் பற்றாக்குறை பிரச்சினைக்கு புலம்பெயர்ந்தோர்தான் காரணம் என்றும், 73 சதவிகிதம் கனேடியர்கள் கனடாவின் மருத்துவ அமைப்புக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதற்கு புலம்பெயர்ந்தோர் காரணம் என்றும், 63 சதவிகிதம் பேர், பள்ளிகளில் கனேடிய மாணவர்களுக்கு இடப்பற்றாக்குறை ஏற்படுவதற்கு புலம்பெயர்ந்தோர் காரணம் என்றும் கருதுவது தெரியவந்துள்ளது.

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் மீது அமெரிக்காவின் அதிரடி தாக்குதல்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?