முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 989 கல்லீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்

 

கல்லீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் தெரியுமா? இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க

கல்லீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் தெரியுமா? இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க | Symptoms Of Liver Cancer

Stomach CancerLiver
 3 மணி நேரம் முன்
Vinoja

Vinoja

  •  
  •  
  •  
Follow us on Google News

கல்லீரல் நமது உடலின் ஒரு முக்கிய அங்கமாகும். இது நம் உடலில் பல விஷயங்களைச் செய்கிறது. அதனால்தான் கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம்.

நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு தேவையான உணவை ஜீரணிக்க கல்லீரல் உதவுகிறது. தற்காலத்தில் துரித உணவுகளை உட்கொள்ளும் அளவு அதிகரித்தமை மற்றும் முறையற்ற உணவுப்பழக்கம் ஆகியன காரணமாக கல்லீரல் புற்றுநோய் அதிகரித்து வருகின்றது.


உலகளாவிய ரீதியில் லட்சக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் இந்த நோயினால் 8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் மக்களின் இறப்புக்களில் கல்லீரல் புற்றுநோய் முக்கிய காரணமாக இருக்கிறது.

சீக்கிரமா பணக்காரர் ஆகணுமா? அப்போ இதை மட்டும் பண்ணுங்க போதும்

சீக்கிரமா பணக்காரர் ஆகணுமா? அப்போ இதை மட்டும் பண்ணுங்க போதும்


கல்லீரல் புற்றுநோய் என்றால் என்ன?

கல்லீரல் புற்றுநோய் என்பது, கல்லீரல் செல்களில் உருவாகும் ஒரு விதமான அபரிமிதமான வளர்ச்சியாகும். இதில் பலவகையான புற்று நோய்கள் உருவாகலாம்.

கல்லீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் தெரியுமா? இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க | Symptoms Of Liver Cancer

மக்களுக்கு ஏற்படும் கல்லீரல் புற்றுநோயில் ‘ஹெபடோசெல்லுலர் கார்சினோமா’ என்பது மிகவும் பொதுவான வகையாகும்.

இந்த வகை புற்றுநோய் கல்லீரலின் உயிரணுவில் உருவாகிறது. கல்லீரலில் தொடங்கும் புற்றுநோயை விட மற்ற இடங்களில் இருந்து கல்லீரலுக்கு பரவும் புற்றுநோய் அதிகம் என சொல்லப்படுகிறது.

இப்படி மார்பகம், நுரையீரல், பெருங்குடல் என மற்ற பகுதிகளில் புற்றுநோய் ஏற்பட்டு கல்லீரலுக்கு பரவினால், அதை மெட்டாஸ்டேட்டிக் புற்றுநோய் என அழைக்கின்றனர்.

கல்லீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் தெரியுமா? இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க | Symptoms Of Liver Cancer

 அறிகுறிகள்

கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதன் அறிகுறி இல்லாமலேயே பல ஆண்டுகள் வாழ முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இது பல தருணங்களில் அறியப்படாமலேயே இருக்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும் சில அறிகுறிகளை வைத்து கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் அறிய முடியும்.

கல்லீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் தெரியுமா? இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க | Symptoms Of Liver Cancer

மேல் வயிறு வலி,வயிறு வீக்கம்,திடீர் எடை இழப்பு, பசி இல்லாமல் போவது,மஞ்சள் காமாலை,உடல் மஞ்சள் நிறமாக மாறுவது, எப்போதும் சோர்வாக இருப்பது, திடீரென உடல்நிலை சரியில்லாமல் போவது, போன்ற அறிகுறிகள் முக்கியமானதாக கருதப்படுகின்றது.

உடைந்த கண்ணாடி வீட்டில் இருந்தா உடனே அப்புறப்படுத்துங்க... இந்த பிரச்சினைகள் ஏற்படும்

உடைந்த கண்ணாடி வீட்டில் இருந்தா உடனே அப்புறப்படுத்துங்க... இந்த பிரச்சினைகள் ஏற்படும்


இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். காரணம் கல்லீரல் புற்றுநோயை பொருத்தவரையில் வெளிப்படையான முதல் கட்ட அறிகுறிகள் ஏற்படாது. 

கல்லீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் தெரியுமா? இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க | Symptoms Of Liver Cancer

கல்லீரல் புற்றுநோய் தீவிரம் அடைந்த பின்னரே இதன் அறிகுறிகள் வெளிப்படும் எனவே இது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம். 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?