தமிழர் பகுதியில் அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து
KilinochchiSri Lankan PeoplesSri Lanka Police Investigation
2 மணி நேரம் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
கிளிநொச்சி - ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த கோர விபத்தானது, இன்று(24) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாணம் - கண்டி அரச பேருந்து ஒன்றும் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் ரக வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பேருந்தானது வீதியில் படுத்துறங்கிக் கொண்டிருந்த மாடுகளுடன் மோதிய நிலையில், எதிரே வந்த வானுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், விபத்தினாால் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பேரில் ஐவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள்