தைவான் விடயத்தில் விளையாடவேண்டாம்: கடும் எச்சரிக்கை விடுத்த சீனா
ChinaTaiwanPhilippines
5 மணி நேரம் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
தைவான் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றவருக்கு பிலிப்பைன்ஸ் வாழ்த்து கூறியதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தைவான் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற லாய் சிங் தே-வுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் வாழ்த்து கூறியதை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் தூதருக்கு செவ்வாய்க்கிழமை சீன வெளியுறவு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
“சீனா உடனான அரசியல் உறுதிமொழிகளை பிலிப்பைன்ஸ் மீறியுள்ளது. மேலும் சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டுள்ளது. தைவான் விவகாரத்தில் விளையாட வேண்டாம் என்று பிலிப்பைன்ஸிடம் தெரிவித்துக் கொள்கிறோம்.
தைவான் பிரிவினைவாதிகளுக்கு தவறான சமிக்ஞைகள் அனுப்புவதை பிலிப்பைன்ஸ் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.” என்று கூறினார்.
மேலும் இந்த விவகாரம் குறித்து முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி பிலிப்பைன்ஸ் தூதருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, திங்கள்கிழமை தைவானுடன் இருதரப்பு உறவை பலப்படுத்த விரும்புவதாகக் கூறி லாய் சிங்குக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் மார்க்கோஸ் ஜூனியர் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்