முல்லைத்தீவில் போதைக்கு அடிமையான கிராம அலுவலர் உள்ளிட்ட இருவர் கைது
![முல்லைத்தீவில் போதைக்கு அடிமையான கிராம அலுவலர் உள்ளிட்ட இருவர் கைது | Arrested For Drug Addiction In Mullaitivu Officer முல்லைத்தீவில் போதைக்கு அடிமையான கிராம அலுவலர் உள்ளிட்ட இருவர் கைது | Arrested For Drug Addiction In Mullaitivu Officer](https://cdn.ibcstack.com/article/1efeb9e3-7319-4a7e-a5b7-0c044eea9dd6/24-65a5da5a762d4.webp)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள கிராம அலுவலர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு நபர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று(15) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற குறித்த கிராம அலுவலர் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினர்களுக்கும் போதைப் பொருட்களை வியாபாரம் செய்து வந்ததாக மக்களால் காவல்துறையினருக்கு இரகசிய தகவல் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
கிராம அலுவலர் உள்ளிட்ட இருவர் கைது
குறிப்பாக குறித்த கிராம அலுவலர் ஹெரோயின் ஐஸ் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்களை பல இளைஞர்கள் ஊடாக பல்வேறு தரப்பினருக்கும் விற்பனை செய்து வருவதோடு அவரும் குறித்த போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாக இருந்ததை அறிந்த மக்கள் புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் புதுக்குடியிருப்பு காவல் நிலைய பொறுப்பதிகாரி அவர்களது வழிகாட்டலில் புதுக்குடியிருப்பு காவல்நிலைய அதிகாரிகள் பல நாட்களாக தொடர்ச்சியாக முயற்சி செய்து வந்த நிலையில் நேற்றைய தினம் (15) குறித்த போதைப் பொருளுக்கு அடிமையான கிராம அலுவலர் மற்றும் இவருடன் இணைந்து குறித்த செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த மேலும் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
இவர்களை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட போது குறித்த நபர்கள் போதை பொருளுக்கு அடிமையாகியிருந்தமை அறியப்பட்டிருக்கின்ற நிலைமையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்