முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 472 பாதுகாப்பற்ற நிலையில் தமிழர்கள்

புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கொடூரமாக தாக்கப்பட்ட இரு சிறுவர்கள் வைத்தியசாலையில்.
! புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கொடூரமாக தாக்குதலுக்குள்ளான இரண்டு சிறுவர்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 15 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் 2 பேர் நேற்றுமுன்தினம் இரவு (02-02-2023) புதுக்குடியிருப்பு தேவிபுரம் அப்பகுதி புதியகுடியிருப்பு வீதியால் சென்றுகொண்டிருந்த நிலையில் அப்பகுதியால் இரவு முற்சக்கரவண்டியில் ரோந்துப்பணிக்காக சென்ற பொலிஸாரால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கொடூரமாக தாக்கப்பட்ட இரு சிறுவர்கள் வைத்தியசாலையில்.! | Puthukkudiyiruppu Police Attack Two Student Injury சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தமது வீட்டின் அயல்வீட்டில் உள்ள நண்பன் ஒருவரின் பிறந்தநாள் நிகழ்வுக்கு சென்றுவிட்டு அருகில் உள்ள தமது வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த வேளை அப்பகுதியால் முற்சக்கரவண்டியில் வந்துகொண்டிருந்த மூன்று பொலிஸார் மேற்படி சிறுவர்களை மறித்து எங்கு சென்று வருகிறீர்கள் என வினாவியதோடு கஞ்சா குடித்து விட்டா வருக்கின்றீர்கள் என கேட்டு பொல்லு தடிகளாலால் மிக மோசமாக தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கொடூரமாக தாக்கப்பட்ட இரு சிறுவர்கள் வைத்தியசாலையில்.! | Puthukkudiyiruppu Police Attack Two Student Injury இவ்வாறு சிறுவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட பொலிஸார் மதுபோதையில் காணப்பட்டுள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளான உள்ளான சிறுவன் ஒருவரது தொலைபேசியையும் பறித்தெடுத்துவிட்டு தாக்குதல் மேற்கொண்டுவிட்டு மீண்டும் வழங்கியுள்ளதாகவும் பாதிக்கப்படுள்ள சிறுவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். தாக்குதலுக்குள்ளான சிறுவர்களில் 15 வயதுடைய சிறுவனின் கைபெருவிரல் எலும்பு முறிவு ஏற்படுள்ளதோடு மற்றைய சிறுவனுக்கும் மிக மோசமான உடல் அடி காயங்கள் ஏற்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கொடூரமாக தாக்கப்பட்ட இரு சிறுவர்கள் வைத்தியசாலையில்.! | Puthukkudiyiruppu Police Attack Two Student Injury தாக்குதலுக்குள்ளான சிறுவர்களில் ஒருவர் தொடர்ந்தும் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதோடு ஒருவர் வைத்தியசாலையிலிருந்து இன்று (04-02-2023) வீடு சென்றுள்ளார். தாக்குதல் இடம்பெற்ற அன்றைய இரவு 12 மணிக்கு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு செய்வதற்க்காக தாக்குதலுக்குள்ளான சிறுவர்களின் பெற்றோர் சென்ற போதிலும் இரண்டு மணித்தியாலம் காத்திருக்கவைத்ததோடு பொலிஸாருக்கு எதிராக எம்மிடம் முறைப்பாடு செய்யமுடியாது என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் தெரிவித்ததோடு முல்லைத்தீவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் சென்று முறைப்பாடு செய்யுமாறு புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைவாக முல்லைத்தீவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்ய குறித்த சிறுவர்களின் பெற்றோர் சென்று முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். அத்தோடு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்துக்கு முறைப்பாடு செய்வதற்காக ஏற்பாடுகளை பாதிக்கப்படுள்ள சிறுவர்களின் பெற்றோர் மேற்கொண்டு வருகின்றனர்.13ஐ திரு.கஜேந்திரன் ஏன் எதிர்க்கிறார் அதற்கு அவரின் விளக்கம்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?