d 565 தமிழீழப் பகுதியில்இலங்கை புலநாய் வாழர்களின் வண்முறை அதிகரித்தமையால், எவரும் இலங்கை செல்வதை சிறிது காலம் தவிர்க்கவும்,
யாழில் கனடா பிரஜைகள் தங்கியிருந்த வீட்டிற்குள் புகுந்து வாள்வெட்டு தாக்குதல்!
யாழ்ப்பாணம் - அனலைதீவில் தங்கியிருந்த கனேடிய பிரஜைகளின் இல்லத்திற்குள் நுழைந்து பெருந்தொகைப் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதோடு கனடாப் பிரஜை மீதும் வாள்வெட்டு தாக்குதலும் இடம்பெற்றுள்ளது.
யாழில் கனடா பிரஜைகள் தங்கியிருந்த வீட்டிற்குள் புகுந்து வாள்வெட்டு தாக்குதல்! | Jaffna Canadian Citizens Sword Attack Money Theft
கனடாவில், இருந்து இரண்டு மாதங்களிற்கு முன்னர் அனலைதீவிற்கு வந்து வீடு புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த குடும்பத்தவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் 12 மணியளவில் கதவை உடைத்து உட்புகுந்த 4 பேர் அடங்கிய கும்பலே இவ்வாறு வாள்வெட்டு தாக்குதலையும் மேற்கொண்டு 3 ஆயிரம் டொலர் மற்றும் கடவுச்சீட்டு உட்பட பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
யாழில் கனடா பிரஜைகள் தங்கியிருந்த வீட்டிற்குள் புகுந்து வாள்வெட்டு தாக்குதல்! | Jaffna Canadian Citizens Sword Attack Money Theft
வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கானவரின் வீட்டில் அயலில் உள்ள பாடசாலையில் கற்பிக்கும் இரு ஆசிரியர்களும் கனடாவில் இருந்து வந்த இவரது மனைவியும் தங்கியிருந்த சமயம் இன்று (24-02-2023) அதிகாலை 12 மணியளவில் முகங்களை கறுப்புத் துணியால் மூடியவாறு 4 பேர் கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
இவ்வாறு நுழைந்த கும்பல் வீட்டில் தங்கியிருந்த ஆசிரியர்களை கட்டி வைத்துவிட்டு கனடாப் பிரஜையினை வாளால் வெட்டியதோடு கனடா கொண்டு செல்ல தயார் செய்யப்பட்ட பொதிகளையும் சேதப்படுத்தி கனடா பிரஜைகளின் உடமைகளை சல்லடைபோட்டு தேடியுள்ளனர்.
[NJLDN]
இதன்போதே 2 ஆயிரம் கனேடிய டொலர், ஆயிரம் அமெரிக்க டொலருடன் இலங்கை நாணயம் மற்றும் கடவுச் சீட்டையும் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது படுகாயமடைந்தவரை அதிகாலையில் படகுமூலம் ஊர்காவற்றுறை கொண்டுவந்து அதிகாலை 2 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த கொள்ளை மற்றும. வாள் வெட்டுத் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிசாருக்கு தற்போது தகவல் வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள்