முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 564 நேர்மையான கண்ணியமிக்க ஒருவரே எங்கள் தலைவன் பிரபாகரன்

நேர்மையான கண்ணியமிக்க ஒருவரே எங்கள் தலைவன் பிரபாகரன் - சிறிலங்கா நீதியமைச்சருக்கு காட்டமான பதிலடி!
படித்த நீங்கள் முட்டாளாக இருக்காதீர்கள் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்று வரை பிரபாகரனை மறக்கவில்லை எனவும் சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் எங்கள் தலைவரை நாங்களும் வாழ்நாளில் மறக்கப்போவதில்லை என்றும் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். அதேபோன்றே நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவினாலும் பிரபாகரனை மறக்க முடியாது என்றும் ஏனெனில் நேர்மையான கண்ணியமிக்க ஒருவரே பிரபாகரன் என்றும் தெரிவித்துள்ளார். அதேவேளை கிளிநொச்சிக்கு ரணில் விக்கிரமசிங்க பயணம் மேற்கொண்டு, படம் காட்டியதாகவும் இதுவரை 100 ரூபாவிற்குகூட அங்கு நெல்கொள்வனவு இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் பொய்ப்பரப்புரை நேர்மையான கண்ணியமிக்க ஒருவரே எங்கள் தலைவன் பிரபாகரன் - சிறிலங்கா நீதியமைச்சருக்கு காட்டமான பதிலடி! | Sri Lanka Parliament Tna Mp Sritharan Ltte Leader எனவே பொய்யான செய்திகளை நாடாளுமன்றத்தின் ஊடாக பரப்பவேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் என்ற வகையில் இனவாதத்தை கொட்டாதீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் நிறைவடைந்து 13 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் இந்த நாட்டில் என்ன நடக்கின்றது என கேள்வி எழுப்பிய அவர், தற்போதும் பிரபாகரனையா செல்லப்போகிறீர்கள் என்றும் காட்டமாக கருத்து வெளியிட்டிருந்தார். வடக்கு மாகாண மக்களின் விவசாயம் உள்ளிட்ட வளங்களை அரசாங்கம் அழிக்கவில்லை என்றும் பிரபாகரனே அனைத்தையும் அழித்தொழித்தார் என்றும் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ச சுமத்திய குற்றச்சாட்டிற்கே சிறீதரன் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?