முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d586 இலங்கையர்களின் வாழ்க்கைச் செலவு மதிப்பீட

இலங்கையர்களின் வாழ்க்கைச் செலவு மதிப்பீடு வெளியீடு
தனிநபரொருவர் ஒரு மாதத்திற்கு இலங்கையில் வசிப்பதற்கு சராசரியாக 12,444 ரூபா போதுமானது என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனிநபர் ஒருவரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்தபட்ச மாதச் செலவு (தேசிய ரீதியிலான மதிப்பீடு) 12,444 ரூபா என்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் ஜூன் மாத அறிக்கை தெரிவிக்கிறது. அடிப்படை வாழ்க்கைச் செலவு இலங்கையர்களின் வாழ்க்கைச் செலவு மதிப்பீடு வெளியீடு | Cost Of Living Estimates For Sri Lankans Per Month அதற்கைமய, கொழும்பு மாவட்டத்தில் வசிப்பதற்காக ஒருவருக்கு அதிகபட்சமாக 13,421 ரூபா தேவைப்படுவதாகவும், இது இலங்கையின் மாவட்டமொன்றில் நபரொருவர் தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக செலவிடும் அதிகூடிய தொகை எனவும் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மாவட்டத்தின் வாழ்க்கைச் செலவு தேசிய மதிப்பீடாக 12,444 ரூபாவை விட 977 ரூபா அதிகமாகும். எனினும், இந்த அறிக்கையின் பிரகாரம், மொனராகலை மாவட்டத்தில் வசிக்கும் ஒருவருக்கு தனது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு அங்கு வசிப்பதற்கு 11,899 ரூபா போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில், ஒருவர் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து வாழ்வதற்குத் தேவையான தொகை 1,225 ரூபாவினால் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உணவுப் பணவீக்கம் உயர்வு இலங்கையர்களின் வாழ்க்கைச் செலவு மதிப்பீடு வெளியீடு | Cost Of Living Estimates For Sri Lankans Per Month எனினும், இந்த புள்ளிவிபரங்களின்படி, ஜூலை மாதத்தில் நபரொருவர் தனது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய செலவழிக்கும் சராசரி விலை இதைவிட அதிகமாக இருக்கும் என்று அனுமானிக்க முடிகிறது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்தில் 60.85 ஆக உயர்ந்துள்ளதுடன், உணவுப் பணவீக்கம் 90.9% ஆக உயர்ந்துள்ளது என்பதைக் குறிப்பிடலாம்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?