முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 587 உன்மைமைச் சொன்ன இராணுவ அதிகாரி,

கொன்று குவிக்கப்பட்ட தமிழர்கள்: பின்னணியில் சிக்கிய ஐக்கிய தேசியக் கட்சி.
.! தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டு எம்மை இனவாதிகளாக சித்திரிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி தான் 1983 ஆம் ஆண்டு ஜூலை காலப்பகுதியில் தமிழ் மக்களை படுகொலை செய்து அந்த பழியை மக்கள் மீது சுமத்தியது என 43 ஆவது படையணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும், நாட்டில் இனவாத முரண்பாட்டையும், ஆயுத போராட்டத்தையும் ஐக்கிய தேசியக் கட்சியே தோற்றுவித்தது எனக் குற்றம் சாட்டிய சம்பிக்க ரணவக்க, பிரேமதாஸ படுகொலை செய்யப்பட்டதை நாட்டு மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடியதை அதிபர் ரணிலும் நன்கறிவார் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஐனநாயக போராட்டத்தை சர்வாதிகாரமாக அடக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகள் நாட்டில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். ஜனநாயகத்திற்கு எதிராக அதிகாரம் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்கள்: பின்னணியில் சிக்கிய ஐக்கிய தேசியக் கட்சி..! | United National Party Killed Tamil Peoples ஐக்கிய தேசியக் கட்சிக்கு பிரதான கொள்கை உண்டு, ஜனநாயகத்திற்கு எதிராக அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதே ஆகும், சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி பொறுப்புக் கூற வேண்டும். தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்களாக தங்களைக்காட்டிக்கொண்டு எம்மை இனவாதிகளாக சித்திரிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி தான் 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்களை படுகொலை செய்து அந்த பழியை மக்கள் மீதும் ஜே.வி.பி மீதும் சுமத்தியது. நாட்டில் இனவாத முரண்பாட்டையும்,ஆயுத் போராட்டத்தையும் ஐக்கிய தேசியக் கட்சியே தோற்றுவித்தது. நாட்டில் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தியஅப்போதைய ஐ.தே .க.தலைவரான முன்னாள் அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தன பாரிய எதிர்ப்புக்களுக்கு மத்தியில் பதவி விலகினார். அதனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அதிபர் ரணசிங்க பிரேமதாஸவின் காலத்தில் வன்முறைகள், கலவரங்கள் தீவிரமடைந்தன. மக்கள் மீது சர்வாதிகாரம் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்கள்: பின்னணியில் சிக்கிய ஐக்கிய தேசியக் கட்சி..! | United National Party Killed Tamil Peoples பிரேமதாஸ படுகொலை செய்யப்பட்டதை நாட்டு மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடினார்கள். இந்த சம்பவங்களை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நன்கு அறிவார்கள். நிறைவேற்றுத்துறை ஜனநாயகத்திற்கு எதிராக செயற்படும் போது அதன் விளைவு பாரதூரமாக அமையும் என்பதற்கு வரலாற்றில் பல சம்பவங்கள் எடுத்துக்காட்டாக உள்ளன. ஜனநாயக உரிமைக்காக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்து விட்டால் அதன் விளைவு பாரதூரமாக அமையும் என்பதை அதிபர ரணில் விக்ரமசிங்க மறந்து விடக் கூடாது என்றார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?