முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 521 தலைவரின் பாதுகாப்பிற்கான புலநாய்வுப்போராளி தெரிவிப்பு,

புலிகளின் தலைவர் உயிருடன் உள்ளாரா - முன்னாள் போராளி வெளியிட்ட உறுதியான தகவல்
விடுதலைப புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை என சிறிலங்கா இராணுவத்துடனான இறுதி கட்ட யுத்தத்தில் ஈடுபட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி அரவிந்தன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன், இருப்பதாகவும், உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார்.ஆனால் எங்கு உள்ளார் என்பதினை தற்போது அறிவிக்க இயலாது' என உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து அறிவித்திருந்தார். கசப்பான உண்மை புலிகளின் தலைவர் உயிருடன் உள்ளாரா - முன்னாள் போராளி வெளியிட்ட உறுதியான தகவல் | Is Ltte Leader Alive Ex Combatant Reveals பழ.நெடுமாறன் தெரிவித்த இந்த கருத்து பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது. இந்த நிலையில் வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் போராளியான அரவிந்தன், 2009ம் ஆண்டு மே மாதம் நடுப்பகுதியில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் நேரடியாகவே போரில் ஈடுபட்ட இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை என தெரிவித்துள்ளார். “அண்ணனை பற்றி தற்போது ஒரு அறிவிப்பு வந்திருக்கின்றது. தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் பற்றிய உண்மை அறிவிப்பு என்று நெடுமாறன் ஐயாவின் கையெழுத்தோடு, ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணன் இருக்கின்றாரா?, இல்லையா? என்று 13 வருடங்கள் பேசிக் கொண்டு, 14வது வருடத்திற்குள் வந்திருக்கின்றோம். அந்த வகையிலே அவர்கள் எல்லோருக்கும் நாங்கள் சொல்ல விரும்புகின்ற கசப்பான உண்மை, அண்ணன் இல்லை என்பதுதான்”.எனத் தெரிவித்தார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?