முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 538 ஐயாவிற்கு ஒரு பணிப்புரைஜெகத் கஸ்பார்

மாபெரும் வரலாற்று தலைவரை ஏன் இப்படி இழிவுபடுத்துகின்றீர்கள் - அருட்பணி ஜெகத் கஸ்பார் வேதனை இறையாண்மை அற்று அநாதைகாளக இருந்த தமிழினத்தை இறையாண்மையை கொண்டு வரக்கூடிய அளவிற்கு இழுத்து வந்த மாபெரும் வரலாற்று தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை இந்த அளவிற்கு இழிவுபடுத்துகின்ற செயலை ஐயா நெடுமாறன் அவர்கள் செய்திருக்க கூடாது. இவ்வாறு வேதனையுடன் தெரிவித்துள்ளார் அருட்பணி ஜெகத் கஸ்பார் அடிகளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களுடன் நிற்க வைத்த மாபெரும் தலைவர் மாபெரும் வரலாற்று தலைவரை ஏன் இப்படி இழிவுபடுத்துகின்றீர்கள் - அருட்பணி ஜெகத் கஸ்பார் வேதனை | Why Are You Insulting The Great Historical Leader தனது மனைவி மற்றும் மகள், மகன் என அனைவரையும் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான சகல வசதி வாய்ப்புகள் இருந்தும் அதனை மறுத்து அவர்களை மக்களோடு மக்களாக நிற்க வைத்த மாபெரும் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள். அதனைவிட அவரது சகோதரர்கள் எவருமே விடுதலைப்புலிகளின் கட்டளை அமைப்பில் எந்தப்பிரிவிலும் வராதவர்கள்.எனவே இப்படி கட்டளை பிரிவில் எதிலும் வராத அவர்களது சகோதரர்களை நம்பி அவர் தப்பிச் சென்றார் அவர்களது பாதுகாப்பில் இருக்கிறார் அவரைப்பற்றி அவர்கள் அதிகாரபூர்வமாக பேசக்கூடிய அளவிற்கு அவர் தன்னை ஆக்கி கொண்டார் என்று சொல்வதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இறையாண்மை அநாதைகளான தமிழர் மாபெரும் வரலாற்று தலைவரை ஏன் இப்படி இழிவுபடுத்துகின்றீர்கள் - அருட்பணி ஜெகத் கஸ்பார் வேதனை | Why Are You Insulting The Great Historical Leader அந்த மாபெரும் தலைவனுக்கு என்னளவில் ராஜேந்திர சோழனுக்கு பிறகு,சேரன் செங்குட்டுவனுக்கு பிறகு, சுந்தரபாண்டியனுக்கு பிறகு,12 ஆம் நூற்றாண்டு பகுதியில் தமிழர்கள் இழந்து விட்ட இறையாண்மையை கடந்த எட்டு நூறு ஆண்டுகளாக இல்லாதிருந்த இறையாண்மை அநாதைகளான தமிழர்களான நாம்.எமக்கென்று இறையாண்மை இல்லை.அவர்களுக்கு இறையாண்மையை பெற்றுக்கொடுக்க போராடியவர் தான் தலைவர் பிரபாகரன். ஓரிரு இலட்சம் மக்களை எண்ணிக்கையில் கொண்டிருக்கின்ற இனங்கள் கூட இறையாண்மை கொண்ட தேசங்களை கொண்டிருக்கின்றபோது ஆயிரம் இலட்சம் உயிர்களை கொண்டிருந்தும் இறையாண்மை இல்லாத இனம் தமிழ் இனம். அந்த இனத்திற்கு ஏறக்குறைய இறையாண்மையை கொண்டு வரக்கூடிய அளவிற்கு இழுத்து வந்த மாபெரும் வரலாற்று தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள். அவரை இந்த அளவிற்கு இழிவு படுத்துகின்ற செயலை ஐயா நெடுமாறன் அவர்கள் செய்திருக்க கூடாது. என தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?