முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 518 சிங்கள அரச உளவாளிகள் காசு கறக்க பெரும் திட்டம் !

தலைவர் இருக்கிறார் என்று சொல்லி சிங்கள அரச உளவாளிகள் காசு கறக்க பெரும் திட்டம் !
நேற்றைய தினம், இந்தியாவிலிருந்து பெரும் எடுப்பில் வெளியான செய்தி தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள், உயிருடன் உள்ளார் என்பது தான். இதனை ஞாபக மறதி நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஐயா நெடுமாறன் அவர்கள் கையொப்பமிட்ட கடிதம் மூலம் ஒரு கும்பல் வெளியிட்டுள்ளது. இதில் அண்ணன் சீமான் அவர்கள், வைகோ ஐயா, என்று பலரைக் கலந்து கொள்ள கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இவர்கள் இதில் கலந்துகொள்ளவில்லை. இதேவேளை… டெமென்ஷியாவில்(ஞாபக மறதி நோயில்) உள்ள ஐயா நெடுமாறன் கையொப்பமிட்ட கடிதத்தை வெளியிட்ட ஒரு கும்பல். உடனடியாக சுவிஸ், யேர்மனி, பிரித்தானிய , கனடா என்று பல நாடுகளில் மக்களிடம் காசைக் கறக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனை மிக மிக நேர்த்தியாக இலங்கை அரச உளவாளிகளோடு இணைந்து ஒரு கும்பல் செயல்படுத்த ஆரம்பித்துள்ளது. தேசிய தலைவர், இறுதி யுத்தத்தில் வாக்கி-டோக்கி மூலம் பேசிய சில விடையங்களைச் சிங்கள அரசு ஊடறுத்துப் பதிவு செய்து வைத்துள்ளது. அந்த ஆடியோ பதிவை வெட்டி ஒட்டி. பின்னர் புது பதிவாக வெளியிட இந்த கும்பல் திட்டமிட்டுள்ளது. இதனைத் தமிழர்களே நம்ப வேண்டாம். இது… இலங்கை அரச புலனாய்வுத் துறையால் மிகவும் நேர்த்தியாகத் திட்டமிடப்பட்ட ஒரு செயல். ஒட்டு மொத்த தமிழர்களும் பெரும் பணத்தைக் கொடுத்தால். அவை அனைத்தும் இலங்கை சென்று, இலங்கையை முன்னேற்றப் பயன்படும். அது மட்டும் அல்ல, எந்த ஒரு நாட்டிலும் தேசிய தலைவரோ இல்லை, மதிவதனி அக்கா, துவாரகா இருந்தால். சர்வதேச ஊடகமான BBC, ITV, மற்றும் அல்ஜசீரா போன்ற ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்து இருக்கும். ஆனால் , இன்றைய நிலையில், காசை எடுத்து இலங்கை அரசுக்குத் தாரைவார்த்துக் கொடுக்க, சில ஒட்டுண்ணிகளால் இந்த ஈனச் செயல் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதனைத் தமிழர்களே நம்ப வெண்டாம்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?