முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 493 இலங்கையில் நடக்கும் போதை பாவினைக்கு இராணுவச் சிப்பாய்களே காரணம்,

முல்லைத்தீவில் பணியாற்றிய இராணுவ வீரரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள்
விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின்போது முல்லைத்தீவு இராணுவ முகாமில் ஆயுத களஞ்சியசாலைக்கு பொறுப்பாக இருந்த சிறிலங்கா இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியின் வீட்டிலிருந்து பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மாத்தறை திஹாகொட, கொட்டாவத்தை பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற இராணுவ சார்ஜன்ட் வீட்டின் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக மாத்தறை தலைமையக காவல்துறையினர் இன்று (09) தெரிவித்தனர். தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் முல்லைத்தீவில் பணியாற்றிய இராணுவ வீரரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள் | Explosives Recovered From House Of Soldier அதன்படி, 48 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ சார்ஜன்ட் என்பவரும் காவல்துறையினரால் விசாரணைக்காக கைது செய்யப்பட்டார். அவரது இரண்டு மாடி வீட்டின் தோட்டத்தில் 5 அடி ஆழத்திற்கு இரண்டு குழிகள் வெட்டப்பட்டு இராணுவ உபகரணங்கள் மற்றும் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். வெடிபொருட்களுடன் சந்தேகநபரின் வீட்டில் 153 மதன மோதக மாத்திரைகள் அடங்கிய இரண்டு பொதிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவில் ஆயுதக் களஞ்சியத்தின் பொறுப்பதிகாரி முல்லைத்தீவில் பணியாற்றிய இராணுவ வீரரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள் | Explosives Recovered From House Of Soldier விடுதலைப் புலிகளின் போரின் போது, ​​முல்லைத்தீவு பகுதியில் உள்ள இராணுவ முகாமில் 05 வருடங்களாக ஆயுதக் களஞ்சியத்தின் பொறுப்பாளராக இவர் இருந்தமை தெரியவந்துள்ளது. அப்போது எடுத்துச் சென்று இந்த வெடிபொருட்களை புதைத்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இருந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணை முல்லைத்தீவில் பணியாற்றிய இராணுவ வீரரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள் | Explosives Recovered From House Of Soldier இந்த வெடிபொருட்கள் வேறு குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதா என்பதைக் கண்டறிய, சந்தேகப்படும்படியான இராணுவ உறுப்பினர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட உள்ளார். கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் மிரிஸ்ஸ முகாமின் கடற்படை புலனாய்வு பிரிவின் புலனாய்வு அதிகாரி ஒருவருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மாத்தறை தலைமையக காவல்துறையினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?