முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d491 விக்டோரிய மாநிலத்தில் தமிழ் அகதி ஒருவர் மரணம்!

விக்டோரிய மாநிலத்தில் தமிழ் அகதி ஒருவர் மரணம்! விக்டோரிய மாநிலத்தின் Pakenham என்ற இடத்தில் தமிழ் அகதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகம் தெரிவித்துள்ளது.
கருணாகரன் ராசசுந்தரன் என்பவர் 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்குப் புகலிடம் தேடி வந்து, 6 வருடங்கள் சிட்னியில் வசித்து வந்த பின்னர், அவரது பாதுகாப்பு வீசா நிபந்தனைகள் காரணமாக 2019 ஆம் ஆண்டு விக்டோரிய மாநிலத்தின் Pakenham என்ற தூர இடத்தில் குடியமர்ந்தார் என்றும், அவர் கடந்த சனிக்கிழமை (பெப்ரவரி 4ஆம் தேதி) அதிகாலை மரணமடைந்துள்ளதாகவும் தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்தார். கடந்த சில வருடங்களாக அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மத்தியில் இவ்வாறான பல மரணங்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அரசின் இறுக்கமான அகதிகள் கொள்கை அவர்களை மனதளவில் கடுமையாக பாதித்து வருவதாகவும் திரு. அரன் மயில்வாகனம் குற்றம் சாட்டினார். பிராந்திய தேசத்தில் வாழ்ந்த அவருக்கு, மன அழுத்தம் மற்றும் அதிர்ச்சிக்கான சரியான ஆதரவு அங்கு கிடைக்கவில்ல திரு. அரன் மயில்வாகனம் Advertisement “மறு சுழற்சித் துறையில் கடினமாக உழைத்து வந்த 39 வயதான கருணாகரன் ராசசுந்தரன், போரினால் ஏற்பட்ட அதிர்ச்சியின் சுமைகளுடன் வாழ்ந்து வந்தவர். பிராந்திய தேசத்தில் வாழ்ந்த அவருக்கு, மன அழுத்தம் மற்றும் அதிர்ச்சிக்கான சரியான ஆதரவு அங்கு கிடைக்கவில்லை. தனது மனைவி, ஐந்து மற்றும் எட்டு வயதுடைய இரண்டு சிறு குழந்தைகளை விட்டுவிட்டு அவர் காலமாகியுள்ளார்” என்று அரன் மயில்வாகனம் மேலும் கூறினார். இதேவேளை, கருணாகரன் ராசசுந்தரனின் இறுதி நிகழ்வுகளை நடத்துவதற்கும் நிர்க்கதியான அவரது குடும்பத்திற்கு உதவி வழங்கவும் தமிழ் ஏதிலிகள் கழகம் நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் திரு. அரன் மயில்வாகனம் கூறினார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?