முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 502 எமது முன்னோர்களின் நாட்டு வைத்தியம்

கெட்ட கொலஸ்ட்ராலை ஒரே மாதத்தில் குறைக்க வேண்டுமா? இந்த கஷாயத்தை மட்டும் குடிச்சு பாருங்க போதும்
பூண்டு பாரம்பரிய சமையலில் தினசரி சமையலில் பயன்படுத்தப்படும் முக்கியமான உணவுப் பொருளாகும். பூண்டை உணவில் சேர்ப்பதன் மூலம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைப் பெற முடியும். ஏனெனில் இதில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக பூண்டு உங்களுடைய தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது அது ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்கிறது என்று சொல்லப்படுகிறது இதனை தினமும் கஷாயம் வடிவில் எடுத்து கொள்வது இன்னும் சிறப்பே. அந்தவகையில் தற்போது பூண்டை வைத்து செய்யக்கூடிய கஷாயம் எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம். கெட்ட கொலஸ்ட்ராலை ஒரே மாதத்தில் குறைக்க வேண்டுமா? இந்த கஷாயத்தை மட்டும் குடிச்சு பாருங்க போதும் | How To Eat Garlic For High Cholesterol தேவையான பொருள்கள் பூண்டு - 1 கப் இஞ்சி - 1 கப் ஆப்பிள் சிடார் வினிகர் - 1 கப் எலுமிச்சை சாறு - 1 கப் தேன் - 2 கப் செய்முறை பூண்டை தோலுரித்து கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். .இதை மிக்சியில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இஞ்சியைத் தோல் சீவி கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். இதை ஒரு கப் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு பாத்திரத்தில் இஞ்சி சாறு ஒரு கப், பூண்டு சாறு ஒரு கப், ஆப்பிள் சிடார் வினிகர் ஒரு கப், எலுமிச்சை சாறு ஒரு கப் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதை மிதமான தீயில் வைத்து நன்கு கொதிக்க விட்டு சுண்ட வைக்க வேண்டும். மொத்தமுள்ள 4 கப் இரண்டு கப்பாக குறையும் வரை சுண்ட காய்ச்ச வேண்டும். இரண்டு கப்பாக சுண்டியபின் அடுப்பை அணைத்து விட்டு சிறிது ஆறிவிடுங்கள். பின் இரண்டு கப் அளவுக்கு தேன் சேர்த்து நன்றாகக் கலந்து பின் ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாது. அறை வெப்பநிலையில் வைத்து பயன்படுத்துங்கள். இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். ஒரு மாதம் தொடர்ச்சியாக சாப்பிட்ட பின் நிச்சயம் உங்களுடைய எல்டிஎல் கொலஸ்டிரால் அளவு நன்றாகக் குறைந்திருப்பதை பார்க்க முடியும்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?