முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 560 தலைவர் பிரபாகரன் எப்போது வருவார்..!

தலைவர் பிரபாகரன் எப்போது வருவார்..!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு அறிவிக்கும் செய்தியை அறிவித்ததன் பின்னணியை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் விவரித்துள்ளார். ஐபிசி தமிழ் ஊடகத்தின் மெய்ப் பொருள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். ஒரு பெரிய போர்க்களத்தில் இருப்பவர் சாகவில்லை, உயிரோடு இருக்கிறார் என்று சொன்னால் அவர் தப்பித்துப் போயிருக்க வேண்டும் என்பதுதான் பொருள். எந்த மார்க்கமாக போனார்? எப்படி போனார்? இப்போது எங்கு இருக்கிறார்? என்ற கேள்விகள் எல்லாம் எழுப்புவது நியாயம். அதற்குரிய பதிலை பிரபாகரன் சொல்ல வேண்டும் அல்லது அவருடன் இருந்த மூத்த தளபதிகள் சொல்ல வேண்டும். பொதுவெளியில் விடுதலைப் புலிகளின் தலைவர் தலைவர் பிரபாகரன் எப்போது வருவார்..! | Ltte Chief Prabhakaran Is Not Dead அவர்களைத் தவிர அந்த ரகசியம் வேறு யாருக்கும் தெரியாது. அவர்கள் வெளிவந்த பிற்பாடு அந்தச் செய்தியை வெளியிடுவார்கள். பொதுவெளியில் தோன்றுவதை விடுதலைப் புலிகளின் தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும். எப்போது தோன்ற வேண்டும்? அதனை எப்போது சொல்ல வேண்டும்? என்பதை அவர் தான் முடிவு செய்ய முடியும். நானோ? நீங்களோ? வேறு ஒருவரோ முடிவு செய்ய முடியாது. 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இறுதிக் கட்டப் போர் முடிந்த போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக அறிவித்தார்கள். அவர் உடல் என்று சொல்லி ஏதோ ஒரு உடலை எல்லாம் காட்டினார்கள். ஆனால் அப்போது இருந்து சர்வதேச சூழ்நிலை வேறு. இப்போது இருக்கும் சர்வதேச சூழ்நிலை முற்றிலும் மாறி இருக்கிறது. ஒன்று, இலங்கையில் உள்நாட்டிலும் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டு இருக்கின்றன. ராஜபக்சர்களை வெற்றி வீரர்கள் என்று கொண்டாடி எவ்வாறு ஆட்சிப் பீடத்தில் அமர வைத்தார்களோ அதே போல சிங்கள மக்கள் ராஜபக்சர்களை பதவியிலிருந்து விரட்டி அடித்திருக்கிறார்கள். இன்னமும் அவர்களுக்கு எதிரான போராட்டம் மக்களால் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற உணர்வு அந்த மக்களுக்கு ஏற்பட்டதன் விளைவு தான் இந்த மாற்றத்திற்கு காரணம். பயங்கரவாதத்திற்கு எதிராக போர் தலைவர் பிரபாகரன் எப்போது வருவார்..! | Ltte Chief Prabhakaran Is Not Dead 2009 இற்கு முன்பு அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத்தை பயங்கரவாதிகள் தகர்த்த போது உலக நாடுகளுக்கு எல்லாம் பயங்கரவாதத்திற்கு எதிராக போர் தொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த சூழ்நிலையை சிங்கள அரசு நன்கு பயன்படுத்திக் கொண்டது. விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு சுதந்திரப் போராட்ட இயக்கம் என்பதை மறைத்து பயங்கரவாத இயக்கம் என்று சித்தரித்தார்கள். அப்போதைய இந்திய அரசும் அதற்கு ஒத்துழைத்தது இலங்கையில் தடை விதித்தார்கள் என்றால், இந்தியாவில் அதற்கு முன்னதாகவே தடை விதித்தார்கள். இதன் விளைவாக உலக நாடுகள் எல்லாம் விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்று தடை செய்யப்பட்டது. இதன் விளைவாக 2009இல் இடம்பெற்ற போரின் போது 20 இற்கும் மேற்பட்ட நாடுகள் சிங்கள அரசுக்கு தேவையான இராணுவ உதவிகளை, நிதி உதவிகளை செய்தன. விடுதலைப் புலிகளை ஒழிக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறான உதவிகளை வழங்கினார்கள். ஆனால், 13 ஆண்டுகளுக்கு பின்னர் நிலைமை இன்று முற்றிலும் மாறிவிட்டது. இப்போது இருக்கின்ற பிரச்சினை ஈழத் தமிழர் பிரச்சினை என்பதை விட இந்தியாவுக்கு அபாயகரமான பிரச்சினை உருவாகிவிட்டது. இந்தியாவுக்கு பேரபாயம் தலைவர் பிரபாகரன் எப்போது வருவார்..! | Ltte Chief Prabhakaran Is Not Dead இலங்கையில் சீனா ஆழமாக காலூன்று நிற்பதனால் ஈழத்தமிழர்களுக்கு மாத்திரமல்ல. இந்தியாவுக்கு பேரபாயம் தென்பகுதியில் கதவை தட்டிக் கொண்டிருக்கிறது. வடக்கிலும் சீனாவால் தொந்தரவு இருக்கிறது. தெற்கிலும் சீனாவால் தொந்தரவு ஏற்படுமானால் அதன் விளைவு என்னவாகும். ஈழத் தமிழர் பிரச்சினை என்பது வேறு சீனாவினால் இந்தியாவுக்கு வந்திருக்கின்ற அபாயம் வேறு என்று பார்க்கக் கூடாது. இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த பிரச்சினைகள் என்று பார்க்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவுக்கு வரும் அபாயங்களை தடுக்க முடியும். ஈழப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும். அந்தக் கோணத்தில் பார்க்க வேண்டிய கட்டம் தற்போது வந்திருப்பதால் தான் தேசிய தலைவர் பிரபாகரன் இருக்கும் செய்தியை அறிவிக்க வேண்டி வந்தது. பிரபாகரன் இருக்கிறார் என்ற செய்தி இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு நம்பிக்கையை ஊட்டி இருக்கிறது. உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. இதனால் பல்வேறு தொடர்விளைவுகள் ஏற்பட்டு கொண்டே இருக்கின்றன என பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?