முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 542 உன்மையை உறுதிப்படுத்திய சீமான்

நெடுமாறனின் கருத்து தமிழினத்தின் தலைவரை சிறுமைப்படுத்தும் செயல் - சீமான் பகிரங்கம்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி உயிரோடு இருக்கிறார் என்பது அவரை சிறுமைப்படுத்தும் செயல் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து மேலும் கருது தெரிவித்த அவர், ' '2009-ம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் பிரபாகரன் உயிரிழந்துவிட்டார் என்பது சிறிலங்கா இராணுவத்தின் அறிவிப்பு இதற்கு சாட்சியமாக பிரபாகரன் உடலை காட்டியது சிறிலங்கா இராணுவம். இயற்கையில் பேரன்புக்காரர் பிரபாகரன் நெடுமாறனின் கருத்து தமிழினத்தின் தலைவரை சிறுமைப்படுத்தும் செயல் - சீமான் பகிரங்கம் | Ltte Chief Prabhakaran Seeman Reveals Surrender ஆனால் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் பிரபாகரன் மரணம் அடையவில்லை என கூறி வந்தார். இந்நிலையில் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன், பிரபாகரன் உயிருடன் இருக்கிறார், பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். இதனை பிரபாகரன் குடும்பத்தின் அனுமதியுடன் அறிவிக்கிறேன் என்றார். நெடுமாறனின் இந்த அறிவிப்பு உலகத் தமிழரிடையே இன்னும் விவாதப் பொருளாக இருந்து வருகிறது.''என தெரிவித்தார். நெடுமாறனின் கருத்துக்கு பதிலளித்த சீமான், 'பிரபாகரன் ஒன்றும் திரைப்பட நடிகர் அல்ல. எப்ப வரனுமோ அப்ப வருவேன் என சொல்லக் கூடியவர் அல்ல. இயற்கையில் பேரன்புக்காரர் பிரபாகரன். இறுதி காலத்தில் மக்களோடு மக்களாகத்தான் பிரபாகரன் மகன் இருந்தார். துரோகிகள் சிலர் நெடுமாறனின் கருத்து தமிழினத்தின் தலைவரை சிறுமைப்படுத்தும் செயல் - சீமான் பகிரங்கம் | Ltte Chief Prabhakaran Seeman Reveals Surrender அதில் எங்கள் துரோகிகள் சிலர்தான் பிரபாகரன் மகன் என காட்டிக் கொடுத்தனர். பிரபாகரன் மகன் இராணுவ பிடியில் இருக்கிறார் என சொல்லப்பட்டது. பிரபாகரன் குடும்பத்தில் ஒருவர் கூட உயிரோடு இருக்கக் கூடாது என சொன்ன ஆள் யார் என்பதும் தெரியும். பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் நெஞ்சில் 5 குண்டுகள். அதற்கெல்லாம் யாரும் பாவம் பார்க்கவில்லையே. பிரபாகரனைப் பொறுத்தவரை எவ்வளவோ நிர்பந்தங்கள் வந்தபோதும் கூட, நாட்டை விட்டு போகமாட்டேன் என்பதுதான் அண்ணனின் நிலைப்பாடு. தனக்காக, தன் நாட்டு விடுதலைக்காக, தன் கட்டளையை ஏற்று பல இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து, பல ஆயிரம் போராளிகள் உயிர் நீத்ததை பார்த்த பிரபாகரன், தன் உயிரை பாதுகாத்து தற்காத்து ஒரு இடத்தில் உயிரோடு இருப்பார் எனில் பிரபாகரனை நீங்கள் சிறுமை படுத்துவதாக அர்த்தம். சண்டைபோட்டு செத்துடுவோம் நெடுமாறனின் கருத்து தமிழினத்தின் தலைவரை சிறுமைப்படுத்தும் செயல் - சீமான் பகிரங்கம் | Ltte Chief Prabhakaran Seeman Reveals Surrender தன் உயிருக்கு அவ்வளவு முக்கியத்துவம் தருகிற கோழை அல்ல பிரபாகரன். என் தோள்மேல் கை வைத்து கூறியது, ''சாகத் துணிந்துட்டீங்கன்னா எல்லாம் சாதாரணமா போய்டுவீங்க.. அந்த திமிரில்தான் நான் எதற்கும் பயப்படாமல் சண்டை செய்கிறேன். எப்படி இருந்தாலும் சாகப்போகிறோம்ல.. எதுக்கு சரணடைந்து சாகனும்? சண்டைபோட்டு செத்துடுவோம்.'' என தெரிவித்தார். இப்போது பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என ஏன் சொல்லப்படுகிறது என்பது சிறிதுநாள் கழித்து அனைவருக்கும் தெரிந்துவிடும். சுபாஷ் சந்திரபோஸ் போல பிரபாகரனை எங்கள் இனத்தவர் என பாஜக கொண்டாட நினைக்கலாம். தமிழ்த் தேசிய அணுக்களோடு கலந்துவிட்ட மாபெரும் வீரன் பிரபாகரன். ராஜீவ் மரணம் நெடுமாறனின் கருத்து தமிழினத்தின் தலைவரை சிறுமைப்படுத்தும் செயல் - சீமான் பகிரங்கம் | Ltte Chief Prabhakaran Seeman Reveals Surrender பாஜகவுக்கும் பழ. நெடுமாறனுக்கும் என்ன தொடர்பு என்பதை எப்படி பேசுவது? அதை சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இப்போது13-வது திருத்தத்தை பாஜக பேசுகிறது. 35 ஆண்டுகள் கழித்து பேசுகிறார்கள். அந்த ராஜீவ் ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தால் தான் அத்தனை பிரச்சனையுமே உருவானது. அப்போது அனுப்பி வைக்கப்பட்ட அமைதிப்படை எங்கள் மண்ணில் செய்த அட்டூழியத்தால்தான் ராஜீவ் மரணம் நிகழ்ந்தது. பொற்கோவிலுக்குள் இந்திரா காந்தி செய்ததற்கு எதிர்வினை அவரது மரணம். என் தாய்நிலத்தில் என்ன செய்தீர்களோ அதற்கு எதிர்வினை மரணம் என நிகழ்ந்தது. அதை காரணம் காட்டி மொத்த இனத்தையுமே இது செய்துவிட்டனர். என தெரிவித்தார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?