முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 534 வெளிநாடொன்றில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞர்கள்!

ஜப்பானில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்து சம்பவம் கடந்த 12 ஆம் திகதி இரவு வேளையில் இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில், விபத்து தொடர்பில் 32 வயதான நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதான நபர் மதுபோதையில் வாகனத்தை செலுத்தியுள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து இடம்பெற்றபோது வாகனத்திற்குள் 20 முதல் 30 வயது வரையான 7 பேர் இருந்துள்ளனர். வெளிநாடொன்றில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞர்கள்! | Sri Lankan Boys Death Japan Accident மாத்தறையைச் சேர்ந்த இளைஞர்கள் மாத்தறையைச் சேர்ந்த 26 வயதான நிசால் சாருக்க மற்றும் சிலாபம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான ரஜித்த லக்மால் ஆகியோரே விபத்தில் உயிரிழந்துள்ளனர். நிசால் சாருக்க வேனைச் செலுத்தியுள்ளதுடன் விபத்தையடுத்து காயமடைந்த அவர் 3 நாட்களாக மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். ரஜித்த லக்மால் விபத்து சம்பவிக்கும் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த விபத்தில் 2 இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் நிஷால் சாருக்கவின் காதலியும் அடங்குவதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்கள் தற்போது சிகிச்சைபெற்று வந்த நிலையில் ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை விபத்தில் உயிரிழந்த நிசால் சாருக்க கடந்த 6 வருடங்களாக ஜப்பானில் வசித்து வந்ததுடன், அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?