முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c786 தைவான் அருகே ஏவுகணைகளை வீசிய சீனா ; எந்த நேரத்திலும் போர்…

தைவான் அருகே ஏவுகணைகளை வீசிய சீனா ; எந்த நேரத்திலும் போர்…! தைவானை பாதுகாக்க சீனாவுடன் மோதுமா அமெரிக்கா..
தைவான் அருகே ஏவுகணைகளை வீசிய சீனா ; எந்த நேரத்திலும் போர்…! தைவானை பாதுகாக்க சீனாவுடன் மோதுமா அமெரிக்கா.. சீனா தைவானின் வட-கிழக்கு கடற்கரையில் அருகிலுள்ள இராணுவ முகாமில் இருந்து இரண்டு டாங்பெங் எனப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசப்பட்டது. தைபே சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான பதற்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. 1940 களில் நடந்த உள்நாட்டுப் போரின் போது சீனாவும் தைவானும் பிரிக்கப்பட்டன. அப்போதிருந்து, தைவான் தன்னை ஒரு சுதந்திர நாடாக அழைத்து வருகிறது. அதேசமயம், சீனா அதை தனது மாகாணமாகப் பார்க்கிறது மற்றும் தேவைப்பட்டால் வலுக்கட்டாயமாக இணைக்கபடும் என கூறி வருகிறது. அதாவது தைவான் மீது சீனாவின் தாக்குதல் அச்சுறுத்தல் பல தசாப்தங்களாக இருந்து வருகிறது. சில நாடுகள் மட்டுமே தைவானை அங்கீகரித்துள்ளன. பெரும்பாலான நாடுகள் தைவானை சீனாவின் ஒரு பகுதியாகவே கருதுகின்றன. தைவானுடன் அமெரிக்கா அதிகாரபூர்வ இராஜதந்திர உறவுகளைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் தைவான் உறவுச் சட்டத்தின் கீழ் அமெரிக்கா அதற்கு ஆயுதங்களை விற்கிறது. தைவானின் தற்காப்புக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 2021 இல், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீனா தைவானைத் தாக்கினால், தைவானை அமெரிக்கா பாதுகாக்கும் என்று கூறினார். சீனாவின் அனைத்து அச்சுறுத்தல்களையும் மீறி அமெரிக்கா சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு வந்து சென்றார். பெலோசியின் வருகையால் திகைத்துப் போன சீனா, தற்போது தைவான் மீது தாக்குதல் நடத்தலாம் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தைவானைச் சுற்றிலும் சீன ராணுவம் ராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்டப் பேராசிரியரான டொனால்ட் ரோத்வெல், நான்சி பெலோசியின் தைவான் பயணம் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் தலைமைக்கு ஒரு சவாலாக மாறி உள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மாநாடு இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் ஜி ஜின்பிங் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்கு வருவார். அத்தகைய சூழ்நிலையில், பெலோசியின் வருகை ஜின்பிங் மதிப்பை குறைப்பதாக அமையும் எனவே அவர் இந்த நடவடிக்கைக்கு வலுவான பதிலைக் கொடுக்க வேண்டும் என எண்ணி உள்ளதாக கூறி உள்ளார். பெலோசி வெளியேறியவுடன், சீனா தைவானின் கடல் மற்றும் வான்வெளியில் வடக்கு, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கில் இராணுவப் பயிற்சிகளை அறிவித்தது. உண்மையான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் இந்த வாரம் முழுவதும் இந்தப் பயிற்சி நடைபெறும் என்று சீன செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது. சீனா போன்ற மாபெரும் சக்தியை சமாளிக்க சமச்சீரற்ற போர் முறையை தைவான் ஏற்றுக்கொண்டது. இது பார்குபின் உத்தி என்றும் அழைக்கப்படுகிறது. எதிரிக்கு முடிந்தவரை கடினமான மற்றும் விலையுயர்ந்த தாக்குதலை உருவாக்குவதே இதன் நோக்கம். தைவான் விமான எதிர்ப்பு, பீரங்கி எதிர்ப்பு மற்றும் கப்பல் எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வாங்கி குவித்துள்ளது. இதில் டிரோன்கள் மற்றும் மொபைல் கடலோர பாதுகாப்பு கப்பல் ஏவுகணை (சிடிசிஎம்) போன்ற குறைந்த விலை போர்க்கப்பல்களும் அடங்கும். சீனாவின் விலையுயர்ந்த கடற்படை கப்பல்கள் மற்றும் கடற்படை உபகரணங்களை அழிக்கும் திறன் அவைகளுக்கு உள்ளது. தைவான் அனைத்து பக்கங்களிலும் கடலால் சூழப்பட்டுள்ளது. தைவானைக் கைப்பற்றுவதற்கு, சீனா அதிக எண்ணிக்கையிலான படைகள் , கவச வாகனங்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள், உணவு, மருத்துவப் பொருட்கள் மற்றும் எரிபொருளைக் கொண்டு செல்ல வேண்டும். இது கடல் வழியாக மட்டுமே சாத்தியமாகும்.பல அடுக்கு கடல் பாதுகாப்பை மீறி சீன வீரர்கள் தைவானை அடைந்தாலும் தைவான் கொரில்லா போருக்கு தனது நகரங்களை தயார் செய்துள்ளது. 35 லட்சம் தைவானியர்கள் கொரில்லா போரில் நிபுணத்துவம் பெற்றவர்களாக உள்ளனர். இந்தநிலையில் சீனா இன்று தைவானின் கடற்பகுதியில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. சீனா தைவானின் வட-கிழக்கு கடற்கரையில் அருகிலுள்ள இராணுவ முகாமில் இருந்து இரண்டு டாங்பெங் எனப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக தைவான் அரசு தெரிவித்துள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?