பிரித்தானியாவில் இரு சகோதரிகளுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை
பிரித்தானியாவில் சிகை அலங்கரிப்பு நிலையத்தை நடாத்திவந்த இரண்டு சகோதரிகள் அதனுடன் சேர்த்து பாரியளவிலான போதைப்பொருள் வியாபாரத்தையும் முன்னெடுத்துச் சென்றமை பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சகோதரிகள் இருவரும் சலூன் கடைகளை நடத்தி வந்ததால், போதை மருந்து தொழில் தொடர்பில் சந்தேகம் எழவில்லை. இரு சகோதரிகளும் கிரேட்டர் மான்செஸ்டர் மற்றும் யார்க்ஷயர் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளனர்.
சலூன் கடை மறைவில் போதை மருந்து தொழிலில் ஈடுபட்ட சகோதரிகள் இருவரும் 300,000 பவுண்டுகள் தொகையை திரும்ப செலுத்த வேண்டும் என நீதிமன்றால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இரு சகோதரிகளுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை | Sisters Act To Shake The Clan In Britain
கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் 44 வயதான ஷாஜியா தின் மற்றும் அவரது மூத்த சகோதரி 47 வயதான அபியா தின் ஆகிய இருவரும் குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒரு குழுவை முன்னெடுத்து நடத்தி வந்துள்ளனர். இந்த விவகாரத்தில் 2020 டிசம்பர் மாதம் இந்த இரு சகோதரிகள் தொடர்பில் மொத்தம் 17 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சகோதரிகள் இருவருக்கு சொந்தமான பகுதிகளில் சோதனை மேற்கொண்ட கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறையினர் மொத்தம் 60 கிலோ ஹெரோயின் மற்றும் கொக்கெய்ன் போதை மருந்தும் 300,000 பவுண்டுகள் தொகையையும் மீட்டுள்ளனர்.
இந்த வழக்கில் ஷாஜியா தின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமான நிலையில், அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அவரது சகோதரிக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இரு சகோதரிகளுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை | Sisters Act To Shake The Clan In Britain
தற்போது இரு சகோதரிகளும் தொடர்புடைய 17 பேர்கொண்ட குழுவினரிடம் இருந்து மொத்தமாக 736,464.30 பவுண்டுகள் தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்