ஜெனிவாவில் காத்திருக்கும் ஆபத்து- விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் அமர்வில் இலங்கைக்கு பெரும் ஆபத்து ஏற்படலாம் என ஜனதா விமுக்தி பெரமுன எச்சரித்துள்ளது.
அதிபர் ரணில் விக்கிரமசிங்க தற்போது செய்து வரும் மனித உரிமை மீறல்களால் இந்த ஆபத்து அதிகரித்து வருவதாக இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் செயலாளர் நாயகம் டில்வின் சில்வா தெரிவித்தார்.
ஜெனிவாவில் காத்திருக்கும் ஆபத்து- விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை | Danger Awaits In Geneva
அத்துடன் தற்போது நாடு பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.ரணிலையும் அவரை பதவிக்கு கொண்டு வந்தவர்களையும் வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்திற்கு தயாராவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் காத்திருக்கும் ஆபத்து- விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை | Danger Awaits In Geneva
இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தினால் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய பிரச்சினைக்குள் நாடு தள்ளப்படும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்