பல்கலைக்கழக மாணவர் தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் விடுத்த கோரிக்கை!
பயங்கரவாதம் எனச் சொல்லி பல்கலைக்கழக மாணவர் தலைவர்களை மூன்று மாதங்களுக்கு தடுப்பிலேயே வைத்திருப்பதற்கான யோசனை மிகவும் வருந்தத்தக்கது.
அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு இது குறித்து பதில் சொல்ல வேண்டி இருக்கும் என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
பல்கலைக்கழக மாணவர் கைது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட மூன்று பேர் 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்தது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை கட்டளை ஒன்றை பெற்று மூன்று மாதங்கள் தடுத்து வைத்திருப்பதற்கு தாங்கள் கோரியிருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளார்கள். பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்று அனைவரும் ஏற்றுக் கொண்ட விடயம்.
கடந்த ஆட்சிக்காலத்திலே பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி வேறொரு சட்டத்தை கொண்டு வருவதற்கு அரசாங்கம் முயற்சி எடுத்திருந்தது. இந்த பயங்கரவாத தடைச் சட்டம் மிக மோசமானது. அதை முற்றாக நீக்கப்பட வேண்டும் என நாடு பூராகவும் ஒரு போராட்டம் வகையில் நடத்தி வருகின்றோம்.
பல்கலைக்கழக மாணவர் தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் விடுத்த கோரிக்கை! | Ma Sumandran S Request University Student
இவ்வாறான சந்தர்ப்பத்தில் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படுகின்ற வரை அதனை உபயோகிக்க மாட்டோம் என வாக்குறுதி கொடுத்திருக்கின்றார்கள். அவ்வாறான சூழ்நிலையில் தான் திடீரென மீண்டும் பயங்கரவாத தடை சட்டத்தை உபயோகிக்கின்றார்கள்.
பல்கலைகழக மாணவர் ஒன்றிய செயலாளர் வசந்த முதலிகே மற்றும் இருவர் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டனர். 16 பேருக்கு பிணை கொடுக்கப்பட்ட போதும் இவர்களுக்கு மட்டும் பயங்கரவாத தடை சட்டம் பிரிவு பிரயோகிக்கப்படுகின்றது.
காலாவதியாகி இருக்க வேண்டிய பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கப்பட வேண்டுமென அனைவரும் ஏற்றுக் கொண்டு கொண்டிருக்கின்றபோதும் பயங்கரவாத தடைச்சட்டத்தை உபயோகிக்க ஆரம்பிப்பது மிகவும் மோசமான அடிப்படையாக நாங்கள் கருதுகிறோம். உபயோகிக்கப்படக்கூடாது.
இந்நிலையில் பயங்கரவாத செயல்கள் எதுவும் நடைபெறவில்லை. மக்கள் ஜனநாயக வழியில் போராடுவது அவர்களுக்கான உரிமை. அதற்காக அவர்களுக்கு தண்டனை கூட வழங்க முடியாது. ஆனால் அதனை பயங்கரவாதம் என சொல்லி மாணவர் தலைவர்களை மூன்று மாதங்களுக்கு தடுப்பிலேயே வைத்திருப்பதற்கான இந்த யோசனை மிகவும் வருந்தத்தக்கது.
அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு இதை கொடுத்து பதில் சொல்ல வேண்டி இருக்கும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதோடு இந்தச் சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை நாங்கள் முன் வைப்போம் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்