முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 859 கோட்டாபய அமெரிக்கா செல்ல முடியாதவாறு வழக்கு தாக்கல் செய்த புலம்பெயர் தமிழர்(

கோட்டாபய அமெரிக்கா செல்ல முடியாதவாறு வழக்கு தாக்கல் செய்த புலம்பெயர் தமிழர்(காணொலி)
கோட்டாபயவிற்கு எதிராக புலம்பெயர் தமிழர் வழக்கு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவிற்கு திரும்ப முடியாதவாறு வழக்குகளை தாக்கல் செய்தவர் தானே என புலம்பெயர் தமிழ் உறுப்பினர் ரோய் சமந்தனம் தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கா சென்றால் தான் தாக்கல் செய்த வழக்கின் மூலம் அவர் கைது செய்யப்படுவார் என ரோய் சமந்தனம் தெரிவித்துள்ளார். கோட்டாபய அமெரிக்கா செல்ல முடியாதவாறு வழக்கு தாக்கல் செய்த புலம்பெயர் தமிழர்(காணொலி) | Case Of Diaspora Tamils Against Gotabaya இணைய வழி நடத்தப்பட்ட கலந்துரையாடலொன்றில் கலந்து கொண்ட போது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். மனைவியின் ஊடாக மீண்டும் அமெரிக்க குடியுரிமை இதேவேளை அமெரிக்க குடியுரிமையை பெற்றுள்ள தனது மனைவியின் ஊடாக மீண்டும் அமெரிக்க குடியுரிமையை பெறுவதற்கு கோட்டாபய தனது சட்டத்தரணிகள் ஊடாக முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. நாட்டில் ஏற்பட்ட மக்கள் புரட்சியை அடுத்து தப்பியோடிய கோட்டாபய முதலில் மலேசியாவிற்கும் பின்னர் சிங்கப்பூருக்கும் அதனைத் தொடர்ந்து தற்போது தாய்லாந்திற்கும் சென்றுள்ளார். கோட்டாபய அமெரிக்கா செல்ல முடியாதவாறு வழக்கு தாக்கல் செய்த புலம்பெயர் தமிழர்(காணொலி) | Case Of Diaspora Tamils Against Gotabaya தாய்லாந்தில் வீட்டுக்காவல் தாய்லாந்தில் 90 நாட்கள் தங்கவே அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெளியே நடமாடக்கூடாது, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் அதாவது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டமை போன்ற நிலையிலேயே அவர் உள்ளார். இந்த நிலையில் அவர் எதிர்வரும் ஓகஸ்ட் 24 ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக பொதுஜன பெரமுனவினர் தெரிவித்துள்ளதுடன் அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடமும் நேரில் சென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?