அதிபர் ரணிலின் முதல் வெளிநாட்டு பயணம்
மக்கள் புரட்சியை அடுத்து நாட்டிலிருந்து வெளியேறிய முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கான வெற்றிடத்தை நிரப்பும் வகையில் பதில் அதிபராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க, பின்னர் நாடாளுமன்றில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் அதிபராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
அதிபர் ரணிலின் முதல் வெளிநாட்டு பயணம் | Ranils First Foreign Trip
இதன் ஒரு கட்டமாக, அதிபராக பதவியேற்ற அவர் முதலாவதாக அடுத்த மாதம் ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது இரு தரப்பு கடன் மறு சீரமைப்பு தொடர்பில் இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளை அழைப்பதற்காக ஜப்பானிய பிரதமருடன் பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளார்.
அதிபர் ரணிலின் முதல் வெளிநாட்டு பயணம் | Ranils First Foreign Trip
இதேவேளை அதிபராக பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஜப்பான் பிரதமர் தனது வாழ்த்தினை தெரிவித்திருந்தார்.
இதனிடையே இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக 12 திட்டங்களுக்கான உதவித் தொகையை ஜப்பானின் ஜெய்கா நிறுவனம் நிறுத்துவதாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் அதிபராகவோ அல்லது பிரதமராகவோ பதவியேற்கும் ஒருவர் முதலில் இந்தியாவிற்கே விஜயம் செய்வது வழமை.ஆனால் இம்முறை ரணில் அதை விடுத்து ஜப்பானுக்கு செல்கின்றமை விதிவிலக்காக அமைந்துள்ளது.
e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?
துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு, By Gokulan 2 மணி நேரம் முன் 0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந
கருத்துகள்