முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 835 சர்வதேசத்தை ஏமாற்றும் தந்திர விளையாட்டில் ஸ்ரீலங்கா அரசாங்கம்

சர்வதேசத்தை ஏமாற்றும் தந்திர விளையாட்டில் ஸ்ரீலங்கா அரசாங்கம் -நாடு கடந்த அரசாங்கம் குற்றச்சாட்டு
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மீதான தடை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மீது ஸ்ரீலங்காவில் தடைநீடிக்கப்பட்டுள்ளமை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற பொறிமுறைதொடர்பான ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களின் அச்சத்தை வெளிப்படுத்துவதாகநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஏனைய புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான ஸ்ரீலங்காவின் தடை நீக்கம், சர்வதேசத்தினை ஏமாற்றும் தந்திர விளையாட்டு எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேசத்தை ஏமாற்றும் தந்திர விளையாட்டில் ஸ்ரீலங்கா அரசாங்கம் -நாடு கடந்த அரசாங்கம் குற்றச்சாட்டு | ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிபந்தனைகளின் 1373 இன் கீழ், இலங்கைக்குள் 577 நபர்களுக்கும் 18 அமைப்புக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 316 நபர்கள் மற்றும் 6 புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பீரிஸ் வெளியிட்ட தகவல் கடந்த ஜூன் 13 ஆம் திகதியன்று, ஸ்ரீலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் உரையில், 2012 ஆம் ஆண்டு தடைவிதிக்கப்பட்ட தனிநபர்கள், அமைப்புக்கள் தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்படுவதோடு, தற்போது 318 தனிநபர்கள் மற்றும் 4 அமைப்புக்கள் தடைப்பட்டியலில் இருந்து நீக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். சர்வதேசத்தை ஏமாற்றும் தந்திர விளையாட்டில் ஸ்ரீலங்கா அரசாங்கம் -நாடு கடந்த அரசாங்கம் குற்றச்சாட்டு | ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத்தொடர் அடுத்த சில வாரங்களின் ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த பட்டியல் வெளிவந்துள்ளது. இது சர்வதேசத்தினை ஏமாற்றும் வேடிக்கை இலக்க தந்திர விளையாட்டையே வெளிக்காட்டுவதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கூறியுள்ளது. எனினும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது தொடரும் தடை, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் ஸ்ரீலங்காவின் அச்சத்தை வெளிப்படுத்துவதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?